திங்கள், 27 மார்ச் 2023

தின பலன்கள்

இன்று சந்திரன் சஞ்சாரம் எல்லா வகையிலும் நன்மை உண்டாக்கும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்து மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் உழைப்பை அதிக ரிக்க செய்யும். குறிக்கோளற்ற பயணங்கள்...Read More
இன்று சுப செலவு கள் உண்டாகும். கையிருப்பு கரையும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக் கும். பார்ட்னர்களுடன் சுமூகமாக செல்வது நல்லது. பழைய...Read More
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்யவேண்டி இருக்கும். வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு செல்ல லாமா என்று கூட தோன்றலாம். மனம் தளராமல் இருப்பது...Read More
இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் ஏற்படலாம். பிள்ளைகள் கல்விக்கான செலவு அதிகரிக்கும். அத்துடன் தேவையானவற்றையும் வாங்கி தருவீர்கள். அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத...Read More
இன்று வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது. எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும். சந்திரன் சஞ்சாரம் காரிய அனுகூலங்களை தரும். மனோதிடம் அதிகரிக்கும்....Read More
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். லாபம் அதிகாரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி...Read More
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளின் செயல்கள் சந்தோஷத்தை தரும். வீட்டிற்கு தேவையான...Read More
இன்று மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள். மன நிம்மதி உண்டாகும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம்...Read More
இன்று பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது ...Read More
இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்துசேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலக...Read More
இன்று இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன்,...Read More
இன்று கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். மேலிடத்தில் உள்ளவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம்...Read More

சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் செங்கல் சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்க நாம் தமிழர்ஆர்ப்பாட்டம். | கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் சட்டத்திற்கு புறம்பாக இயங்குவதாகவும் கனிம வள கொள்ளையில் ஈடுபடுவதாகவும் கூறி தொடரப்பட்ட வழக்கில், சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் அனைத்து செங்கல் சூளைகளையும் முடி சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்ட செங்கற்களை மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அபராதம் செலுத்தி எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் 177 செங்கல் சூளைகளின் மின் இணைப்பையும் துண்டிக்க வலியுறுத்தியும் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளை மூடக் கோரியும் யானை வழித்தடங்களில் உள்ள பள்ளங்களை மூட வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசைமதிவாணன் உட்பட, மண்டல செயலாளர் அப்துல் வஹ்ஹாப், ஹிம்லர், ஸ்ரீராம், நர்மதா, கார்த்திகா, பெரியதனம் ராமச்சந்திரன், சின்னதுரை ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். இதில் செய்தியாளர்களை சந்தித்த மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா, தடாகம் பள்ளத்தாக்கு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மீதும் செங்கல் சூளை உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து எந்த ஒரு அரசியல் அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

போலீசார் திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்துவதோடு பொய் வழக்கு பதிவு | கோவையில் போலீசார் திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தி துன்புறுத்துவதோடு பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்வதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த திருநங்கைகள் கைகளைத் தட்டியும் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை டாடாபாத் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி அதிகாலை நான்கு மணி அளவில் காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் வசூல் செய்து கொண்டிருந்த திருநங்கைகளை போலீசார் விரட்டியபோது, போலீசார் திருநங்கைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுளளனர். மேலும் திருநங்கைகள் போலீசார் ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததோடு உதவிய ஆய்வாளரை தாக்கியதாக , உதவி ஆய்வாளர் காளீஸ்வரி என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் 10 க்கும் மேற்பட்ட திருநங்கைகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதோடு இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள், டாடாபாத் பகுதியில் நடந்த சம்பவத்தில், காட்டூர் காவல் ஆய்வாளர் பழனியம்மாள் தங்களை தாக்கியதாகவும் மாறாக திருநங்கைகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருநங்கைகள் கைகளைத் தட்டியும் ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பேசிய திருநங்கை மும்தாஜ், போலீசாரை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்ததற்கான ஆதாரங்கள் எதுவும் போலீசாரிடம் இல்லை எனவும் தங்களை போலீசார் கடுமையாக தாக்கி துன்புறுத்திதோடு பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் , இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையென்றால் திருநங்கைகள் தறரகொலை செய்து கொள்வோம் என தெரிவித்தார். மேலும் காவல் நிலையத்தில் இதுகுறித்து கேட்க சென்றபோது காவல் உதவி ஆய்வாளர் ஆடையை பிடித்து இழுத்தது துரத்தியதாகவும் புகார் கூறிய மும்தாஜ் தங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாத காரணத்தால் வசூல் செய்து வருவதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநங்கைகளுக்கு சுயதொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்..இதனைதொடர்ந்து திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

தென் மாவட்ட மக்களின் வேதனையை தீர்க்க முதலமைச்சர் முன்வருவாரா? | தென் மாவட்டங்களில் நடைபெறும்  குளறுபடியை தீர்ப்பதற்கு, தீர்வு காணமா  திமுக அரசு என்று ,மக்கள் விவாதித்து வருகிறார்கள். குறிப்பாக கண்ணகி கோவில் சித்ரா பவுர்ணமி தேதியை, கேரள அரசு மாற்றி அறிவித்துள்ளதால் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டிருக்கிறது.ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் தேதி அறிவிக்கப்படும் நிலையில் ,இந்த ஆண்டு முன்கூட்டியே கேரளா அரசு வேறு தேதியை அறிவித்ததால் பரபரப்பும், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் தென் மாவட்ட மக்கள் திக்கு தெரியாமல், இன்றைக்கு இந்த அரசு மீது நம்பிக்கை வைத்த இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.  தமிழக கேரளா எல்லைகளான கூடலூர் அருகே, விண்ணேற்றி பாறை மலை உச்சியில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோயிலிலே, சித்ரா பௌர்ணமி அன்று நடக்கும் விழாவினை, ஒரு மாதத்திற்கு முன் நடத்துவதாக தேதியை அறிவித்து இடுக்கி மாவட்ட நிர்வாகம், ஒட்டுமொத்த குளறுபடிக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறது.  இந்த கோவில் தமிழகத்தினுடைய வனப்பகுதியில் இருந்த போது, கடந்த சில ஆண்டுகளாக கேரளா அரசு இக்கோயிலை சொந்தம் கொண்டாட தொடங்கி இருக்கிறது.  எப்படி முல்லை பெரியார் அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு வதந்திகளை பரப்பி, புதிய அணை கட்டிய தீருவோம் என்று ஒற்றை காலில் நிற்கிற கேரளா அரசு, இன்னைக்கு அதை தொடர்ந்து இந்த கண்ணகி கோவில் உரிமையும் இன்றைக்கு கை வைக்க தொடங்கியிருக்கிறார்.  அந்த வழிபாடு என்பது நாம் காலம் காலமாக நடத்தி வருகிற வழிபாடு. அது நம்முடைய உரிமை, அந்த வழிபாட்டு உரிமையில் கூட இன்றைக்கு கேரளா அரசு கை வைத்திருப்பது குளறுபடியும், இரு மாநில மக்களுடைய உறவிலே, கேள்விக்குறியாக இருக்கும் வகையிலும், இடைவெளி ஏற்படுகின்ற நடவடிக்கையாக அமைந்திருப்பது வேதனையின் வேதனையாக இருக்கிறது.  இந்த கோயில் தமிழகத்தில் இருந்த போதிலும், தொடர்ந்து இன்றைக்கு கேரளா அரசு கோயிலை சொந்தம் கொண்டாட, இந்த இரண்டு ஆண்டுகளிலேயே தான் முழுமூச்சாக,  திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்து வருகிறது. கூடலூரில் இருந்து பெரும்பாலும் பக்தர்கள் நடந்து சென்று கோயில் தரிசனம் செய்து வருகின்றனர்.  ஜீப் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டுமானால், குமுளி சென்று அங்கிருந்து அங்கிருந்து கேரள வனப்பகுதிக்கு வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்த கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை கேரள வனப்பகுதியாக இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் விழா நடப்பதற்கு முன்பாக தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, ஒரு ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி நடத்துவதாக வந்தது.  இந்த சூழ்நிலையில் கேரளாவில் உள்ள ஒரு தனியார் அமைப்பினர்,  மே 6ல்  கண்ணகி சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடுவது எனவும், இரு மாநில கலெக்டர்களின் கூட்டம் மார்ச் 24 நடத்த வேண்டும் எனவும், இடுக்கி கலெக்டருக்கு மாவட்ட ஆட்சித் தேர்வுக்கு மனு அனுப்பினர் .அதன் அடிப்படையில் இடுக்கி மாவட்டம் தேனி மாவட்டத்திற்கு தெரிவித்திருப்பதாகத தகவல்கள், செய்திகள் இப்போது வந்துள்ளன.  ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பிலே தேதி முடிவு செய்து ,தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படும் இதுதான் நடைமுறை, இந்த ஆண்டு ஒரு மாதத்திற்கு முன்பே தேதியை இடிக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது, இதிலே ஏதேனும் ஒரு சூட்சமம் இருக்கிறதா? என்று மக்கள் அச்சப்படுகிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.  சித்ரா பௌர்ணமி மே 5ஆம் தேதி வருகிறது, ஆனால் அடுத்த நாள் 6ம் தேதி திருவிழா கொண்டாடப்படும் என தெரிவித்திருப்பதால் ஏற்பட்ட குளறுபடி ,கண்ணகி பக்தர்களிடம் மிகப்பெரிய அதிர்ச்சி அதிர்வலையும் ஏற்படுத்தி இருக்கிறது.  முல்லைப் பெரியாறு பிரச்சனை,  மங்களதேவி கண்ணகி கோயில்  பிரச்சனை,நம்முடைய தமிழகத்தில் சேர்ந்திருக்கிற பகுதிகளை, கேரளா பகுதியை சேர்ப்பதற்கான ரீசர்வே முறையாக, டிஜிட்டல் நம்முடைய நிலப்பகுதியை  எடுத்துக் கொள்கிற முயற்சியை, அந்த பகுதி விவசாயிகள் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அம்மா ஆட்சியில் 2014 ஆண்டில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ளலாம், நிறைவாக அந்த பேபி அணையை சீர் செய்து 152 அடி உயர்த்திக் கொள்ளலாம் என்று ஒரு வரலாற்று தீர்ப்பை பெற்றுக் கொடுத்தார்.  தென்  மாவட்டகளான மதுரை ,தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட  மக்கள், விவசாயிகள் முல்லைப் பெரியாறு மீட்டு தந்த அம்மாவிற்கு மிகப்பெரிய நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தை இதே மண்ணிலே மண்ணிலே நடத்தினார்கள்.  ஆனால் ஆட்சி பொறுப்பு ஏற்ற முதலமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளிலே முல்லை பெரியார் குறித்து,  உரிய நடவடிக்கைக்கு மட்டும் அல்ல, அது குறித்து பேசுவதற்கே அவர் தயங்குகிறார்.  கேரளா அரசு புதிய அணை கட்டுவோம் என்று சொன்னவுடன், ஐந்து மாவட்டங்களில் விவசாயி திரட்டி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை எடப்பாடியார் நடத்தினார்.  விவசாயிகள்  உரிமையிலும் இன்றைக்கு  குளறுபடி ஏற்படுத்தியும் மட்டுமல்லாது, கண்ணகி கோவில் உரிமையிலே கேரளா தலையிடுவது என்பது, தமிழகத்தினுடைய உரிமையை பறிக்கிற செயலாக தான் இப்போது பார்க்கப்படுகிறது. முதலமைச்சர்உரிய நடவடிக்கை எடுக்க எடுத்து, குளறுபடி கலைக்க முன்வர வேண்டும்,  இல்லை என்றால் கண்ணகி கோவிலில் உரிமையை நிலைநாட்ட, எடப்பாடியார் கவனத்திற்கு எடுத்து சென்று அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

2,600 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்ற சமூகமாக தமிழ் சமூகம் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு | 2,600 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்ற சமூகமாக தமிழ் சமூகம் உள்ளது என மதுரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு மதுரை உலக தமிழ்ச் சங்க வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 7 நாட்கள் நடைபெறும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை தொடக்க விழாவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர், நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் பேசுகையில் "எனது தாய்மொழி மலையாளம், ஆனால் நான் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன், தமிழ்நாட்டில் பணியாற்றுவது எனக்கு கிடைத்த வரப்பிரசாதம், இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம், தொழில்நுட்ப வளர்ச்சியில் தற்போது உள்ள வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகலாம், படைப்பாற்றல் இருந்தால் மாணவர்கள் ஆளுமைகளாக உருவாகலாம், எதிர்காலத்தில் உலகத்தை தமிழன் ஆளுக் கூடிய வாய்ப்புகள் உள்ளது" என பேசினார், நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில் "தமிழுக்கும் மதுரைக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு, இலக்கியத்தில் இருந்து தான் நம்முடைய எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முடியும், தமிழ் மொழியின் தொன்மை 2,600 ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ளது, 2,600 ஆண்டுகளுக்கு முன் கல்வி கற்ற சமூகமாக தமிழ் சமூகம் உள்ளது, சங்க இலக்கியத்தில் பயன்படுத்திய சொற்கள் தற்போது கூட வழக்காடு சொற்களாக பயன்படுத்தி வருகிறோம், பாண்டிய நாட்டில் பேசப்படும் மொழி தேவாரத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என தமிழ் மொழி வழி காட்டுகிறது, தமிழ் மொழி நம்மை இணைத்து வைத்துள்ளது, தமிழ்நாட்டில் இருந்து நிலங்கள் பிரிந்து வேறு மாநிலங்களாக உருவாகி இருந்தாலும் மனங்கள் மாறவில்லை, தமிழ்நாட்டின் தொன்மையை உறுதிப்படுத்தும் வண்ணம் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது, மதுரையில் திறக்கப்பட உள்ள கலைஞர் நூலகம் அறிவுசார் நூலகமாக அமையும்" என பேசினார்

அம்பேத்கரின் சிலையின் கையில் தாமரைப் பூவை வைத்து சென்ற பாஜகவினரால் பரபரப்பு | MADURAl பட்டியலின சமுதாய மக்களுக்கான சிறப்பு நிதி ஒதுக்கீட்டை திரும்ப அனுப்பிய தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து அம்பேத்கர் சிலையிடம் ஹெச்.ராஜா தலைமையில் மனு அளித்த பாஜகவினர் அம்பேத்கரின் சிலையின் கையில் தாமரைப் பூவை வைத்து சென்ற பாஜகவினரால் பரபரப்பு முரசொலி உள்ளிட்ட பஞ்சமி நிலம் மீட்புக்காக பாஜக நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா? வேங்கைவயல் விவகாரத்தில் திமுக கவுன்சிலருக்கு தொடர்பு என்பதால் திருமாவளவன் போராட்டம் நடத்தவில்லை என குற்றச்சாட்டு. ஆர் எஸ்பாரதி பேசாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் பேசாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம் என ஹெச்.ராஜா எச்சரிக்கை. மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களுக்காக ஒதுக்கக்கூடிய சிறப்பு உட்கூறு திட்ட நிதி மற்றும் பட்டியல் சமூகத்தினருக்கான துணைத்திட்ட நிதியினை முறையாக பயன்படுத்தாமல் தமிழக அரசு திரும்பி அனுப்பியதோடு மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்தியதாக கூறி மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையின் கையில் பாஜக மூத்த நிர்வாகி எச் ராஜா தலைமையில் பாஜகவினர் கோரிக்கை மனு வழங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அம்பேத்கர் சிலையிடம் கையில் வைத்ததோடு அம்பேத்கர் சிலையின் கையில் தாமரைப் பூவையும் வைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா : தமிழக அரசு பட்டியலின வகுப்பினருக்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்தி சமத்துவபுரம் கட்டியுள்ளார்கள், இதுவரை பட்டியல் இன சமூகத்திற்கு கடந்த 2 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து 10,446 கோடி ரூபாயை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பி வைத்து மோசடி செய்துள்ளனர். சமூக நீதிப் பாதுகாப்பு என கூறி பட்டியலின சமுதாய மக்களுக்கு சொல்லொனா துரோகத்தை தமிழக அரசு செய்திருக்கிறார்கள் அதனால் சட்டமேதை அம்பேத்கர் தான் இவர்களை தட்டி கேட்க வேண்டும் என்பதற்காக அம்பேத்கர் சிலைக்கு மனு கொடுத்துள்ளோம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிதி அடங்கிய பட்டியலை அம்பேத்கர் சிலையிடம் வழங்கியுள்ளோம் என்றார். திராவிட கட்சிகள் பட்டியலின மக்களுக்கு எதிராக அநீதி செய்கிறது அம்பேத்கர் தான் இவர்களை தட்டி கேட்க வேண்டும், பட்டியல் இனத்தவர் மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது பட்டியல் இனத்தவர்கள் மீதான தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளை வைக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளன் திமுகவுடன் ஏன் இன்னும் இருக்கிறார் வெளியேறிவிடலாமே என கேள்வி எழுப்பினார். பட்டியலின சமூக மக்கள் மீது திருமாவளவனுக்கு அக்கறை இருந்தால் வேங்கை வயல் சம்பவத்தில் ஏன் திருமாவளவன் ஒரு நாள் கூட சென்று போராட்டத்தில் ஈடுபடவில்லை குற்றவாளிகளை கைது செய்யும் வரை நகர மாட்டேனென்று கூறி காத்திருப்புப் போராட்டம் நடத்திருக்கலாமே ஏன் செய்யவில்லை ஏனென்றால் அந்த சம்பவத்தில் திமுக கவுன்சிலர் ஈடுபட்டதாக கூறுகிறார்கள் திருமாவளவனுக்கு பட்டியலின மக்கள் மீதான நலன் இல்லை என்பதை பட்டியலின சமுதாய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் பட்டியிலின சமூகத்தினரை ஆதிதிராவிடர் என்ற பெயர் தவறானது ஆதித்தமிழர் அல்லது சாம்பவர் என கூறுங்கள் என்றார். 1926 அரசாணையில் தெலுங்கு பேசுகிற ஹரிஜன மக்கள் ஆதி தெலுங்கர் என்றும் தமிழ் பேசக்கூடிய ஹரிஜன மக்கள் ஆதிதிராவிடர் என்றும் அழைக்கப்படுவார் என உள்ளது அதை எதிர்த்து போராட்டம் நடத்துங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளது முரசொலி கட்டிடம் தொடங்கி தமிழக முழுவதிலும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுக்க பாஜக அறைகூவல் விடுகிறது எங்கே இதனை திருமாவளவன் ஆதரிப்பாரா? தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்கள் அனைத்தையும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு உண்மையான நபர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், பஞ்ச பஞ்சமி நிலங்களை அடாவடி செய்து ஆக்கிரமித்து வைத்துள்ளார்கள் முரசொலி உட்பட பஞ்சமி நிலத்தை மீட்டு தர பாரதிய ஜனதா கட்சி நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா என நேரடியாகவே அழைக்கிறோம் ஆர் எஸ்பாரதி பேசாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் பேசாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்

மதுரை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு +12 பொதுத்தேர்வை மொத்தம் 37457 பேர் எழுதுகின்றனர் | மதுரை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு +12 பொதுத்தேர்வை மொத்தம் 37457 பேர் எழுதுகின்றனர்- இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை நடைபெற உள்ளது இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்வினை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத இருக்கின்றனர். மதுரை மாவட்டத்தை பொறுத்தவ மேல்நிலை +12 பொதுத்தேர்வில் 323 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் 18734 பேரும், மாணவியர்கள் 18723 பேரும் ஆக மொத்தம் 37457 பேரும் 116 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளதாகவும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து வினாத்தாள்கள் 30 வழித்தடங்கள் வழியாக ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் கொண்டு செல்லப்பட உள்ளதாகவும், இப்பொதுத் தேர்வில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் அறைக் கண்காணிப்பாளர்கள், நிலையான படை உறுப்பினர்கள் என 3400 தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆய்வு அலுவலர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இத்தேர்வினை கண்காணிக்க உள்ளனர். இவ்வாண்டு 352 மாற்றுத்திறனாளிகள் மாணவ/மாணவியர்களில், கண்பார்வை குறையுள்ள/மனவளர்ச்சி குன்றிய மற்றும் கை ஊனமுற்ற 80 மாணவ/மாணவியர்களுக்கு சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாண்டு 4 மையங்களில் மேல்நிலை இரண்டாமாண்டு தனித்தேர்வர்கள் 1231 பேர் தேர்வெழுதவுள்ளனர். இவ்வாண்டு மேல்நிலை பொதுத் தேர்விற்கு உறங்கான்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி புதிய தேர்வு மையமாக அரசுத் தேர்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் சிறந்த துறையாக காவல்துறை இருந்தது. இப்போது ஏவல் துறையாக உள்ளது. | திமுக அரசின் மக்கள் விரோத போக்கை தோலுரித்து காட்டுவதால் தான் எடப்பாடி பழனிச்சாமி மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது எனவும், இந்த போக்கு தொடர்ந்தால் மனித வெடிகுண்டாக மாறுவோம் என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் கடந்த சனியன்று எடப்பாடி பழனிச்சாமி குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறு வீடியோ வெளியிட்ட அமமுக பிரமுகர் ராஜேஸ்வரனை தாக்கிய விவகாரத்தில், இ.பி.எஸ் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறி அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. பழங்காநத்தம் பகுதியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற வரும் ஆர்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தில் போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "எடப்பாடி பழனிச்சாமி மீது பொய்வழக்கு பதியும் இது போன்ற சர்வாதிகார போக்கு தொடரும் என்றால் மதுரையில் அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம். துணை முதலமைச்சராக இருந்த போது ஸ்டாலினால் மதுரைக்குள் நுழைய முடியவில்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எதிர்கட்சி தலைவராக தைரியமாக மதுரைக்கு வந்தார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் சிறந்த துறையாக காவல்துறை இருந்தது. ஆனால், இப்போது ஏவல் துறையாக உள்ளது. திமுக அரசின் மக்கள் விரோத போக்கை தோலுரித்து காட்டும் தலைவராக உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. அதனை பொறுக்க முடியாமலே வழக்கு பதியப்பட்டு உள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற துப்பில்லாத அரசு. எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றிய திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கும் பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார். மதுரையில் துவங்கி இருக்கும் இந்த ஆர்பாட்டம் வெறும் டிரெயல் (Trail) தான். மதுரை தொண்டர்கள் ஜெயிலுக்கு போக பயந்தவர்கள் அல்ல. நாங்கள் பல ஜெயில்களை பார்த்தவர்கள். எங்களிடம் இது போன்று பூச்சாண்டி காட்டாதீர்கள். அதிமுக எதற்கும் அஞ்சாது சர்வாதிகார ஹிட்லர் அரசை மக்கள் தூக்கி எறிவார்கள். ஸ்டாலின் வீட்டிற்கு செல்வார், எடப்பாடி பழனிச்சாமி கோட்டைக்கு செல்வார்" என்றார். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "திமுக அரசு நாட்டை பற்றி கூட கவலைப்பட வேண்டாம். கமிஷனை மட்டும் வாங்கிக் கொண்டு ஆட்சி நடத்துங்கள். தேவையில்லாமல் வழக்கு பதிவு செய்து குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். கருணாநிதியாலே அதிமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலினால் என்ன செய்து விட முடியும்? கண்ணகி நீதி கேட்டதால், தவறு செய்த மன்னன் இறந்து போனான். எடப்பாடி பழனிச்சாமி மீது தவறான வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரி மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

வெப் ஸ்டோரி

மேலும் காண்க

எல்லாம் காட்டு

Cricket Update

Live

எல்லாம் காட்டு

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை: தொடரும் சோகம்!

ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒரு இளைஞர் தற்கொலை: தொடரும் சோகம்!

ஆன்லைன் ரம்மியால் ஏற்கனவே பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு 26 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாடியதன் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து அதன் காரணமாக மனவிரக்தி அடைந்து தற்கொலை செய்யும் சோக நிகழ்வு தொடர்கதை ஆகி வருகிறது.

உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது யாருக்கு லாபம்?