அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் தேர்தல் முறையில் அதிரடியான மாற்றங்களை கொண்டுவரும் வகையில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இனிவரும் தேர்தல்களில் ராணுவத்தினர் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றும் பாதுகாப்பு படையினரைத் தவிர, மற்ற குடிமக்கள் எவருக்கும் 'தபால் ஓட்டு' மற்றும் 'இமெயில் ஓட்டு' வசதிகள் கிடையாது என்று அவர் அறிவித்துள்ளார்.