சுமார் 43 நாட்களாக நீடித்து வந்த அமெரிக்க அரசின் முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதாவில் கையெழுத்திட்டார். இதன்மூலம் அனைத்து துறைகளும் மீண்டும் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.