தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 43 நாட்களாக நீடித்து வந்த அமெரிக்க அரசின் முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதாவில் கையெழுத்திட்டார். இதன்மூலம் அனைத்து துறைகளும் மீண்டும் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.