2011 Tamil Nadu Retrospect | 2011ஆம் ஆண்டில் தமிழகம்!
ஜனவரி:
காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் காலமானார்
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 59
பிப்ரவரி:
நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரசில் இணைந்தார்
ஜி.கே.வாசன், தங்கபாலு தலைமையில் நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் ம.பு.க சோதனை
2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய புலனாய்வு கழகத்தினர் இன்று சோதனை நடத்தினர்.
மார்ச்:
ஆ.இராசா நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகத்தால் விசாரணை செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேர்தலை புறக்கணிப்பதாக மதிமுக அறிவிப்பு
கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை தர அதிமுக மறுத்ததால், அக்கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள மதிமுக, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல்:
நடிகை சுஜாதா காலமானார்
உடல்நலக் குறைவால் பிரபல தமிழ் நடிகை சுஜாதா சென்னையில் இன்று காலமானார்.
மே:
நடிகர் அலெக்ஸ் மரணம்
உடல் நலக்குறைவால் நடிகர் அலெக்ஸ் நேற்று மரணம் அடைந்தார். அவரது வயது 52.
அ.இ.அ.தி.மு.க கூட்டணி- 203; தி.மு.க கூட்டணி-31 தொகுதிகளில் வெற்றி
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி 203 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணி 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த்
சுவாசத்தை மேம்படுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.
சாலை விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பலி
திருச்சியை அடுத்த பாடாலூர் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார்.
ஜூன்:
போர்க்குற்றவாளிகளை பிரகடனப்படுத்த ஐ.நா.வை இந்தியா வலியுறுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தம்
இந்தக் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரயிருந்த சமச்சீர் பாடத் திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பழைய பாடத் திட்டத்தையே தொடர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
ஜூலை:
நடிகர் ரவிச்சந்திரன் மரணம்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் சென்னையில் நேற்றிரவு காலமானார். அவருடைய உடல் தகனம் இன்று மாலை நடைபெறுகிறது.
ஆகஸ்ட்:
3 பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவும் - சட்டப் பேரவையில் தீர்மானம்
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செப்டம்பர்:
பரமக்குடி, மதுரையில் கலவரம் - துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை விடுவிக்க கோரி பரமக்குடியில் நடந்த கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள்.
கூடங்குளம் அனல்மின் நிலையத்தை மூட தொடர் உண்ணாவிரதம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அனல்மின் நிலையத்தை மூடக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வாச்சாத்தி: கற்பழித்த 17 பேருக்கு 7 ஆண்டுச் சிறைத் தண்டனை
தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் புகுந்து அங்கு வாழ்ந்து வந்த பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்த வன, காவல் அதிகாரிகள் 17 பேருக்கு தருமபுரி அமர்வு நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அக்டோபர்:
திமுக தலைமை மீது அதிருப்தி: பரிதி இளம்வழுதி திடீர் விலகல்
திமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சிப் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி திடீரென விலகி உள்ளார்.
திருச்சி இடைத்தேர்தலில் கே.என்.நேருவை வீழ்த்தினார் பரஞ்சோதி
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேருவை 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதி வீழ்த்தினார்.
10 மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றியது அதிமுக
சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் நெல்லை உள்ளிட்ட 10 மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
தமிழக அமைச்சர் கருப்பசாமி மரணம்
அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் சொ.கருப்பசாமி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 56.
நவம்பர்:
மக்கள்நல பணியாளர்கள் 13,500 பேரை நீக்கினார் ஜெயலலிதா - அச்சத்தில் சாலைப்பணியாளர்கள்
தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை முதலமைச்சர் ஜெயலலலிதா மீண்டும் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இவ்வாறு இவர்களை ஜெயலலிதா பணி நீக்கம் செய்வது 3வது முறை.
பேருந்து கட்டணமும் கடும் உயர்வு
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. பால் விலையும், மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன.
'டேம் 999' படத்துக்கு தமிழக அரசு தடை
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய படமான "டேம் 999'' படம் தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
டிசம்பர்:
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை: தமிழக - கேரள எல்லையில் பதற்றம்
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் நடந்து வரும் வன்முறை காரணமாக தமிழகம் - கேரளா எல்லையில் 3வது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த வேண்டும் - சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
எந்தச் சூழ்நிலையிலும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்றும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு தமிழகத்திற்கு தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தோழி சசிகலா, நடராஜன் உள்பட 14 பேரை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா
உயிர்த் தோழி வி.கே.சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன் உள்ளிட்ட 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. போளூர் வரதன் காலமானார்
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் போளூர் வரதன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 59
பிப்ரவரி:
நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரசில் இணைந்தார்
ஜி.கே.வாசன், தங்கபாலு தலைமையில் நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் ம.பு.க சோதனை
2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் மத்திய புலனாய்வு கழகத்தினர் இன்று சோதனை நடத்தினர்.
மார்ச்:
ஆ.இராசா நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகத்தால் விசாரணை செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசாவின் நண்பர் சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தேர்தலை புறக்கணிப்பதாக மதிமுக அறிவிப்பு
கேட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளை தர அதிமுக மறுத்ததால், அக்கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள மதிமுக, தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
ஏப்ரல்:
நடிகை சுஜாதா காலமானார்
உடல்நலக் குறைவால் பிரபல தமிழ் நடிகை சுஜாதா சென்னையில் இன்று காலமானார்.
மே:
நடிகர் அலெக்ஸ் மரணம்
உடல் நலக்குறைவால் நடிகர் அலெக்ஸ் நேற்று மரணம் அடைந்தார். அவரது வயது 52.
அ.இ.அ.தி.மு.க கூட்டணி- 203; தி.மு.க கூட்டணி-31 தொகுதிகளில் வெற்றி
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி 203 தொகுதிகளிலும், தி.மு.க. கூட்டணி 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த்
சுவாசத்தை மேம்படுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது.
சாலை விபத்தில் அமைச்சர் மரியம் பிச்சை பலி
திருச்சியை அடுத்த பாடாலூர் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம் பிச்சை உயிரிழந்தார்.
ஜூன்:
போர்க்குற்றவாளிகளை பிரகடனப்படுத்த ஐ.நா.வை இந்தியா வலியுறுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
இலங்கையில் போர்க் குற்றங்கள் நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தம்
இந்தக் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரயிருந்த சமச்சீர் பாடத் திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பழைய பாடத் திட்டத்தையே தொடர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
ஜூலை:
நடிகர் ரவிச்சந்திரன் மரணம்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் சென்னையில் நேற்றிரவு காலமானார். அவருடைய உடல் தகனம் இன்று மாலை நடைபெறுகிறது.
ஆகஸ்ட்:
3 பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாகக் குறைக்கவும் - சட்டப் பேரவையில் தீர்மானம்
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள 3 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்படி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செப்டம்பர்:
பரமக்குடி, மதுரையில் கலவரம் - துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை விடுவிக்க கோரி பரமக்குடியில் நடந்த கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள்.
கூடங்குளம் அனல்மின் நிலையத்தை மூட தொடர் உண்ணாவிரதம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அனல்மின் நிலையத்தை மூடக் கோரி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
வாச்சாத்தி: கற்பழித்த 17 பேருக்கு 7 ஆண்டுச் சிறைத் தண்டனை
தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில் புகுந்து அங்கு வாழ்ந்து வந்த பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்த வன, காவல் அதிகாரிகள் 17 பேருக்கு தருமபுரி அமர்வு நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அக்டோபர்:
திமுக தலைமை மீது அதிருப்தி: பரிதி இளம்வழுதி திடீர் விலகல்
திமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கட்சிப் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி திடீரென விலகி உள்ளார்.
திருச்சி இடைத்தேர்தலில் கே.என்.நேருவை வீழ்த்தினார் பரஞ்சோதி
திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.நேருவை 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பரஞ்சோதி வீழ்த்தினார்.
10 மாநகராட்சி மேயர் பதவியை கைப்பற்றியது அதிமுக
சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி மற்றும் நெல்லை உள்ளிட்ட 10 மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
தமிழக அமைச்சர் கருப்பசாமி மரணம்
அ.தி.மு.க.வை சேர்ந்த அமைச்சர் சொ.கருப்பசாமி சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 56.
நவம்பர்:
மக்கள்நல பணியாளர்கள் 13,500 பேரை நீக்கினார் ஜெயலலிதா - அச்சத்தில் சாலைப்பணியாளர்கள்
தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேரை முதலமைச்சர் ஜெயலலலிதா மீண்டும் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இவ்வாறு இவர்களை ஜெயலலிதா பணி நீக்கம் செய்வது 3வது முறை.
பேருந்து கட்டணமும் கடும் உயர்வு
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. பால் விலையும், மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளன.
'டேம் 999' படத்துக்கு தமிழக அரசு தடை
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய படமான "டேம் 999'' படம் தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
டிசம்பர்:
முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை: தமிழக - கேரள எல்லையில் பதற்றம்
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் நடந்து வரும் வன்முறை காரணமாக தமிழகம் - கேரளா எல்லையில் 3வது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்த வேண்டும் - சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
எந்தச் சூழ்நிலையிலும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்றும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கேரள அரசு தமிழகத்திற்கு தடை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தோழி சசிகலா, நடராஜன் உள்பட 14 பேரை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா
உயிர்த் தோழி வி.கே.சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன் உள்ளிட்ட 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார்.
