1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
  4. dont do these things after taking food

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

food
பொதுவாக உணவு அருந்திய உடனேயே பலரும் பல வேலைகளை வேகமாக செய்கிறார்கள். ஆனால் அது தவறு. உணவருந்திய பின் நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்;

குளித்தல்: சாப்பிட்ட உடனே குளித்தால் ரத்த ஓட்டம் தோலின் பகுதிக்கு சென்று வயிற்றுக்கான ரத்த ஓட்டம் குறைந்து செரிமானம் தாமதமாகும்.

உடனே படுப்பது: சாப்பிட்டுவுடன் படுப்பது நெஞ்சு எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் கழித்து படுக்க வேண்டும். இரவு உணவுக்கும் தூங்க செல்வதற்கும் இடையே 2 மணி நேரம் இருப்பது மிகவும் நல்லது. அதுவும் தூக்கத்திற்கு முன் சிறிது நேரம் நடந்து விட்டு படுப்பது இன்னும் நல்லது..

அதிக தண்ணீர் குடித்தல்: உணவருந்தியதும் உடனே அதிகமாக தண்ணீர் கொடுத்தால் செரிமான நீரில் நீர்த்துப் போய் செரிமானம் மந்தமாகும்.

டீ அல்லது காபி குடித்தல்: உணவுக்கு பின் தேநீர் அல்லது காபி குடிப்பது உணவில் உள்ள சத்துக்கள் உறிஞ்சப்படுவதை தடுத்து அமிலத்தன்மையை உருவாக்கும். இதனாலும் செரிமானம் பாதிக்கப்படும்.

பழங்கள் சாப்பிடுதல்: உடனடியாக பழங்கள் சாப்பிடுவது வாயு தொல்லை அல்லது செரிமான கோளாறை உண்டாக்கும்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
30 வயதுக்கு மேல் சாப்பிட வேண்டிய உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..