ஜான்பாண்டியனை விடுவிக்கக் கோரி பரமக்குடி, மதுரையில் கலவரம் - துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான்பாண்டியனை விடுவிக்க கோரி பரமக்குடியில் நடந்த கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள்.
கமுதி அருகே பார்த்திபனூரில் இன்று நடக்க இருந்த இமானுவேல் சேகரன் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக சென்றபோது ஜான்பாண்டியனை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு என்ற இடத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் பரமக்குடி, மதுரையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. கலவரக்காரர்களை விரட்ட காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டை வீசினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கலவரக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதில் 2 வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
கலவரக்காரர்கள் காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதலில் பரமக்குடி டி.எஸ்.பி., காவல்துறை துணை ஆணையர் செந்தில்வேலன் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து கலவரக்காரர்களை விரட்டி காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியானார்கள்.
இதே போல் மதுரை சிந்தாமணியில் நடந்த கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரகாஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானத்தை தொடர்ந்து பரமக்குடி, மதுரையில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கமுதி அருகே பார்த்திபனூரில் இன்று நடக்க இருந்த இமானுவேல் சேகரன் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக சென்றபோது ஜான்பாண்டியனை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு என்ற இடத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் பரமக்குடி, மதுரையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. கலவரக்காரர்களை விரட்ட காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டை வீசினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கலவரக்காரர்கள் காவல்துறை வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். இதில் 2 வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
கலவரக்காரர்கள் காவல்துறையினர் மீது நடத்திய தாக்குதலில் பரமக்குடி டி.எஸ்.பி., காவல்துறை துணை ஆணையர் செந்தில்வேலன் உள்பட ஏராளமானோர் காயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து கலவரக்காரர்களை விரட்டி காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பேர் பலியானார்கள்.
இதே போல் மதுரை சிந்தாமணியில் நடந்த கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பிரகாஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானத்தை தொடர்ந்து பரமக்குடி, மதுரையில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
