1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தம்

சமச்சீர் கல்வி
இந்தக் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரயிருந்த சமச்சீர் பாடத் திட்டத்தை நிறுத்தி வைத்துவிட்டு, பழைய பாடத் திட்டத்தையே தொடர தமிழக அரசு முடிவெடு‌த்துள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் புனித ஜார்ஜ் கோட்டையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

த‌ற்போதைய சம‌‌ச்‌சீ‌ர் பாட‌த் ‌தி‌ட்ட‌ம் மாணவ‌ர்க‌ளி‌ன் க‌ல்‌வி‌த் தர‌த்தை உய‌ர்‌த்து‌ம் வகை‌யி‌ல் இ‌லலை. எனேவ, சமச்சீர் பாடத் திட்டத்தை மே‌ம்படு‌த்‌தி செயல்படுத்துவது குறித்து ஆராய வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு, பள்ளிகள் பழைய பாடத் திட்டத்தையே தொடரலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

பழைய பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், ஜூன் 15ஆம் தேதி பள்ளிகளைத் திறக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.