தோழி சசிகலா, நடராஜன் உள்பட 14 பேரை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா
உயிர்த் தோழி வி.கே.சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன் உள்ளிட்ட 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழியாக இருந்து வந்தவர் சசிகலா. அவரது கணவர் நடராஜனின் நடவடிக்கை காரணமாக ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா.
இந்த நிலையில், வி.கே.சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன், எம்.ராமச்சந்திரன், ராவணன், டி.டி.வி.தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், திவாகரன், வெங்கடேஷ், மோகன் (அடையாறு), குலோத்துங்கன், ராஜராஜன். மகாதேவன், தங்கமணி ஆகிய 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நீக்கப்பட்ட சசிகலா, அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழியாக இருந்து வந்தவர் சசிகலா. அவரது கணவர் நடராஜனின் நடவடிக்கை காரணமாக ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவரை கட்சியில் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா.
இந்த நிலையில், வி.கே.சசிகலா, அவரது கணவர் எம்.நடராஜன், எம்.ராமச்சந்திரன், ராவணன், டி.டி.வி.தினகரன், வி.பாஸ்கரன், வி.என்.சுதாகரன், திவாகரன், வெங்கடேஷ், மோகன் (அடையாறு), குலோத்துங்கன், ராஜராஜன். மகாதேவன், தங்கமணி ஆகிய 14 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
அ.இ.அ.தி.மு.க.வினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நீக்கப்பட்ட சசிகலா, அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
