1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kamalhaasan comment about tuticorin murder

திமுகன்னு சொல்ல மாட்டீங்களா?!.. கமலை திட்டும் நெட்டிசன்கள்!...

kamal stalin
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே 17 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். போலீசார் தனிப்பட்ட அமைத்து குற்றவாளிகளை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சாந்தமா, கோபப்படாம இருந்துட்டா நதி சுத்தமாயிடுமா?.. நல்லவங்கள்ளாம் கோபப்படாம இருக்கறதுனாலதான் இந்த மாதிரி சாக்கடையே ஓடுது…இந்த மாதிரி சாக்கடையா வச்சிருக்கறதுனாலதான்… அவனவன் நானும் கொஞ்சம் ஒண்ணுக்கடிச்சா என்ன கெட்டுரும்… காறி துப்பினா என்ன கெட்டுரும்னு செஞ்சிக்கிட்டே இருக்கான்”

சமூக இழிவுகளைக் கண்டு மனம் வெதும்பி 32 ஆண்டுகளுக்கு முன்பு நான் மகாநதியில் வெளிப்படுத்திய கருத்து இது. இன்னும் நிலைமை மாறவில்லை. அந்தக் கோபம் என்னுள் தீரவில்லை. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரீக சமுதாயமாக கருதவே  முடியாது. அவர்கள் அச்சுறுத்தப்படும் சூழலில் எந்த வளர்ச்சிக்கும் அர்த்தமில்லை. எந்தப் பேச்சுக்கும் பொருளும் இல்லை’ என பதிவிட்டிருக்கிறார்.

இதையடுத்து ‘ஏன் அரசை கேள்வி கேட்காமல் சமூகத்தின் மேல் பழியை போட்டு எஸ்கேப் ஆகுறீங்க.. இதனால் என்ன பயன்?.. அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதை தேவையான நடவடைக்கை எடுத்தாதான் சமூகம் உருப்படும்’ என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். இப்போது ஆட்சியில் இப்போது திமுக அரசுதான்.. ஆனால் திமுக அரசுக்கு எந்த கண்டனமும் இல்லையே.. திமுக என்று சொல்வதற்கு உங்களுக்கு பயமா?’ என்றும் பலரும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
திமுகவுக்கு ஆதரவாக இன்று பிரச்சாரத்தை துவங்கும் ஓபிஎஸ்!..