1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Warrant against Imran Khan cancelled

இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து

பிரதமர் ஷபாஷ் ஷெரீப்
பாகிஸ்தான் நாட்டில், பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான  ஆட்சி நடந்து வருகிறது.   கடந்தாண்டு முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக ஏப்ரல் மாதம் சுமார் 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில், அவர் பிரதமராக இருந்தபோது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கிடைத்த பரிசுப் பொருட்களை அதிக விலைக்கு விற்றதக வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் இறுதியில்,  லாசூர் நீதிமன்றம், இம்ரான்கானுக்கு ஜாமீனில்  வெளிவரமுடியா பிடிவாரண்ட்  பிறப்பித்தது.

இந்த உத்தரவை அடுத்து, இம்ரான்கான் வீட்டிற்குப் போலீசார் சென்றபோது, அவர் தலைமறைவானார்.

அதன்பின்னர்,. தொலைக்காட்சி மூலம் பேசிய இம்ரான்கான் ஆளும் அரசிற்கு எதிராக விமர்சனம் கூறினார்.

இதுதொடர்பாகவும் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.

இதையடுத்து,இம்ரான்கான் சார்பில் பலூசிஸ்தான் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த  நீதிமன்றம், இம்ரான்கானுக்கு எதிரன பிரிவாரண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது. 
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
சீனாவில் பரவும் காய்ச்சல்....மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த அரசு முடிவு