1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ct nirmal kumar says 2500 only after budget

பெண்களுக்கு ரூ.2500 எப்போது?.. சிடி நிர்மல்குமார் கொடுத்த அப்டேட்!..

vijay
2021 தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.1000 கொடுப்போம் என திமுக சொன்னது. ஆனால் ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கழித்து அந்த தொகை பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத்தொகை 2500ஆக உயர்த்தி தரப்படும் என சொல்லப்பட்டிருந்தது..

தற்போது அந்த கட்சி ஆட்சி அமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜயும் முதல்வராகி விட்டார். எனவே 2500 எப்போது கொடுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பெண்களிடம் ஏற்பட்டிருக்கிறது. மறுசீராமைப்பு பணிகள் நடைபெற்றுவருவதால் விரைவில் மகளிர் உரிமை தொகை பெண்களுக்கு கொடுக்கப்படும் என முதல்வர் விஜய் கூறினார். இதற்கு முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.. வாக்குறுதியில் 2500 என சொல்லிவிட்டு இப்போது என்ன மறு சீரமைப்பு/.. ஆயிரத்தையாவது கொடுங்கள் என்று அவர் சொல்லியிருந்தார்.

ஒருபகக்ம், இந்த மாதம் 1 ஆம் தேதி உரிமை தொகை பெறும் பெண்களின் வங்கி கணக்குகளில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது.  அடுத்த மாதம் 1000 வருமா இல்லை 2500 வருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.டி நிர்மல் குமார் ‘பட்ஜெட்டில் அறிவித்த பிறகு 2500 கொடுக்கப்படும்.. நிதி ஆதாரங்களை சரி செய்த பிறகு அந்த திட்டம் செயல்படுத்தப்படும்’ என விளக்கமளித்தார்.. மேலும் தவெக எந்த வெர்ஷனும் கிடையாது.. அது புது வெர்ஷன்’ எனவும் அவர் கூறினார்..
அடுத்த கட்டுரையில்
7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...