1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy meeting tn governor tomorrow

எங்கிட்ட இருந்து எம்.எல்.ஏக்களை தூக்கிட்டாங்க!.. ஆளுநரை சந்திக்கும் பழனிச்சாமி!..

eps vijay
சட்டமன்றத் தேர்தலில் தவெக 35 சதவீத வாக்குகளை பெற்றாலும் 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே ஆட்சியமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே, காங்கிரஸ், விசிக,கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக தரவு கேட்டது. அவர்களும் ஆதரவு கொடுக்க தவெக ஆட்சி அமைந்து  தவெக தலைவர் விஜயும் முதலமைச்சராக மாறிவிட்டார்..

திடீர் திருப்பமாக அதிமுகவிலிருந்து சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் பிரிந்து தவெகவை ஆதரிப்பதாக கூறினார்கள். இது கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியது. தமிழக முதல்வர் விஜய் சட்டசபையில் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்த போது அந்த 24 அதிமுக எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதிமுக தொடர் தோல்விகளை சந்திப்பதால் பழனிச்சாமி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த பழனிச்சாமி 24 எம்.எல்.ஏக்களிடம் இருந்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளை பறித்தார். அதோடு அதிமுக கொறடா மூலம் அவர்களின் எம்.எல்.ஏ. பதவிகளையும் அவர் பறிப்பாரா என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது.. அதோடு, தவெக செய்தது குதிரை பேரம் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சொல்லி வருகிறார்.

இந்நிலையில்தான் தமிழக பொறுப்பாளர் அர்லேக்கர் இன்று 10.30 மணிக்கு சென்னை வரவேற்பதாக சொல்லப்படுகிறது எனவே தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக கூறி ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அநேகமாக நாளை காலை எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது..
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
பொதுமக்கள் டிஸ்டர்ப் ஆகக்கூடாது!.. காவல்துறைக்கு விஜய் போட்ட உத்தரவு!..