தொடர்புடைய செய்திகள்
- நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்று கொள்ளவில்லை: ஈரோடு தேர்தல் குறித்து ஓபிஎஸ்..!
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பது எப்போது?
- தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: பீதி வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவிப்பு..!
- அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை கிடையாது: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
- ஈரோடு கிழக்கில் ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியுள்ளது: ஈபிஎஸ் கண்டனம்..!
தமிழகத்தில் நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைப்பு: ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு..!
தமிழகத்தில் நடைபெறவிருந்த பேரணி ஒத்திவைப்பு: ஆர்.எஸ்.எஸ் அறிவிப்பு..!
தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடைவிதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடந்து பெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது ஆர்எஸ்எஸ் பேரணிக்கு முழுமையாக நாங்கள் தடை விதிக்கவில்லை என்றும் ஒரு சில பகுதிகளில் மட்டும்தான் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் சட்டம் ஒழுங்குகள் பாதிப்பில் ஏற்படக்கூடாது என்பதற்காக மாநில அரசு கவனமாக இருக்கிறது என்றும் தமிழக அரசு தரப்பு வாதம் செய்தது. கோவையில் கடந்த காலங்களில் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றதால் மாநில அரசின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கவில்லை என்றும் நடைமுறையில் தான் தவறு என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு மார்ச் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
இதனை அடுத்து தமிழகத்தில் நாளை மறுநாள் நடத்த திட்டமிட்டிருந்த பேரணியை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
