இந்திய இளைஞர்களிடம் இருந்து ஒற்றுமைன்னா என்னன்னு கத்துக்கோங்க.. பாகிஸ்தான் ஊடகங்கள்
இந்தியாவின் ஜென்-இசட் தலைமுறை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டங்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய காரணமாக அமைந்தன. மீம்கள், ரீல்ஸ்கள் மற்றும் சமூக வலைதளங்களை ஆயுதமாக ஏந்தி இவர்கள் நடத்திய போராட்டம், இந்தியா மட்டுமின்றி அண்டை நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இலங்கை மற்றும் நேபாளத்தில் நடந்த இளையோர் எழுச்சிகளை போலவே, இந்திய இளைஞர்களின் இந்த எழுச்சியும் அந்த நாட்டு இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இலங்கைக் கார்ட்டூனிஸ்டுகள் மற்றும் நேபாளத்தின் உள்ளடக்க உருவாக்குநர்கள் இந்திய மாணவர்களின் ஒற்றுமையையும் துணிச்சலையும் வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக, மும்பையில் போலீஸ் வேனை தடுத்து நிறுத்திய இளம்பெண்ணின் புகைப்படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மிக ஆச்சரியமாக, பாகிஸ்தான் இளைஞர்களும் ஊடகங்களும் இந்திய ஜென்-இசட் தலைமுறையின் போராட்ட முறைகளை கொண்டாடி தீர்த்துள்ளனர். மத, சாதி பேதங்களை கடந்து இந்திய இளைஞர்கள் காட்டிய ஒற்றுமை தங்களுக்கு வியப்பளிப்பதாகவும், பாகிஸ்தான் இளைஞர்கள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
எல்லைகள் பிரிந்திருந்தாலும், இந்த இளைஞர்களின் எழுச்சி ஒட்டுமொத்த ஆசியாவின் கவனத்தையும் பெற்றுள்ளதுடன், உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது.
Edited by Siva
