தொடர்புடைய செய்திகள்
- கொரோனா சூழலைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் திறக்க முயற்சி – வைகோ கண்டனம்!
- ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி… விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!
- ஓடிப்போ கொரோனா சனியனே..! – தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு ஓடிய கிராம மக்கள்!
- டாக்டரும் இல்ல.. நர்ஸும் இல்ல.. அனாமத்தாக கிடந்த நோயாளிகள்! – கான்பூர் மருத்துவமனை மீது வழக்கு!
- பொதுமக்களுக்கு ஆக்சிஜன் வழங்க சொந்த காரை விற்ற நபர்! குவியும் பாராட்டுக்கள்
ஆக்ஸிஜன் வண்டியை மறைக்காதீங்க – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவும் நிலையில் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் இருந்து வாகனங்கள் வழியாக ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டும் உள்ளது. தற்போது ஆக்ஸிஜனுக்கு பரவலாக தேவை உள்ளதால் மாநில அரசுகள் ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்த வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சக்ம் மாநில அரசுகளிடம் வலியுறுத்தியுள்ளது.
