தொடர்புடைய செய்திகள்
- ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி… விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!
- ஓடிப்போ கொரோனா சனியனே..! – தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு ஓடிய கிராம மக்கள்!
- சமந்தாவின் படம் 300 திரையரங்குகளில் தமிழ்நாட்டில் ரிலீஸ்!
- முதல் முதலாக கேமராவுக்குப் பின்னால்… இயக்குனராக மோகன்லால்!
- கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார் முதல்வர்!
கொரோனா சூழலைப் பயன்படுத்தி ஸ்டெர்லைட் திறக்க முயற்சி – வைகோ கண்டனம்!
கொரோனா இரண்டாவது அலை மிகவேகமாக பரவி வருவதால் மருத்துவ ஆக்ஸிஜன் போதுமான அளவுக்குக் கையிருப்பு இல்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்ட வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனம் தங்கள் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து தருவதாகவும், அதற்காக ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது. ஆனால் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆக்சிஜன் தருகிறேன் என்ற பெயரில், ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இயக்க முயற்சிக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சிக்கு தமிழக அரசு அனுமதி தரக்கூடாது.' எனக் கூறியுள்ளார்.
