1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump warning iran again

சொன்னத செய்யலனா மீண்டும் குண்டு போடுவோம்!.. ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்..

trumph
ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக்கூடாது எனக்கூறி அந்த நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த சில மாதங்களாகவே தாக்குதல் நடத்தி வருகிறது. தன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.

இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் ஆகியோரின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது எனது. எனவே, ஈரானுடனான போரை நிறுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதற்காக போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் அமெரிக்க உருவாக்கியிருக்கிறது. இதில் டிஜிட்டல் முறையில் ஏற்கனவே அமெரிக்காவும், ஈரானும் கையெழுத்து போட்டுவிட்டதாகவும் வருகிற வெள்ளிக்கிழமை றையாக இரு நாடுகளும் கையெழுத்திடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், ஈரானின் எச்சரிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்னும் இறுதியாகவில்லை. ஒப்பந்தத்தை ஈரான் ஏற்கவில்லை என்றால் மீண்டும் குண்டு வீசுவோம்.. இரண்டு நாட்களில் ஹார்மூஸ் திறக்கப்பட வேண்டும்’ என்று அவர் கூறினார்.
அடுத்த கட்டுரையில்
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமான்?!.. நாதகவில் நடப்பது என்ன?..