திருச்சி ரயில்வே கோட்டம் முழுமையான மின்மயமாக்கம்.. தமிழ்நாடு ரயில்வே வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்..
தமிழ்நாடு ரயில்வே வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல் எட்டப்பட்டுள்ளது. திருச்சி ரயில்வே கோட்டம் தற்போது முழுமையாக மின்மயமாக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இதன் இறுதிக்கட்ட பணியாக, அறந்தாங்கி வழியாக இயங்கும் 70 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் கொண்ட பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையேயான வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.
இதன் மூலம் தெற்கு ரயில்வேயின் ஒட்டுமொத்த அகல ரயில் பாதை வலையமைப்பில் உள்ள 5,068 ரூட் கிலோமீட்டர் தொலைவும் 100 சதவீதம் மின்மயமாக்க Head ஐ எட்டியுள்ளது. இந்தப் புதிய பாதையில் உரிய ஆய்வுகள் மற்றும் மணி நேரத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்திலான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் சட்டப்பூர்வ அனுமதி கிடைத்தவுடன், இப்பகுதியில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் மின்சார இன்ஜினlகளுடன் இயக்கப்படும், இதனால் டீசல் பயன்பாடு பெருமளவில் குறையும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தால், இப்பகுதி மக்களுக்கு மேலும் மேம்பட்ட மற்றும் விரைவான ரயில் சேவைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த மின்மயமாக்கல் திட்டம் தமிழகத்தின் போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது.
Edited by Siva
