தொடர்புடைய செய்திகள்
- டாஸ்மாக் கடைகளில் 54 புதிய மதுபானங்கள் அறிமுகம்!.. மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி!..
- தமிழகம் முழுவதும் ரெஸ்டோபாருக்கு அனுமதி!.. மதுபான பிரியர்கள் மகிழ்ச்சி!..
- டாஸ்மாக் மதுவுக்கு கூடுதலாக ரூ. 10. தடுக்க சட்ட விதிகளில் திருத்தம்: தமிழக அரசு முடிவு
- டாஸ்மாக் பார்கள் மீண்டும் திறக்க உத்தரவு.. அமைச்சர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு...
- டாஸ்மாக் பார் உரிமக் காலம் நீட்டிப்பா? இன்று மாலை அமைச்சர் தலைமையில் முக்கிய ஆலோசனை!
ரெஸ்டோ பார் திட்டம் : அமைச்சர் விக்னேஷ் மறுப்பு!
தமிழகத்தில் உணவகத்துடன் கூடிய மதுபான கூடங்களான ரெஸ்டோ பார் அமைப்பதற்கு டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற பகுதிகளைப் போல தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களின் எண்ணிக்கையைக் குறைத்து, புதிய வரியுடன் கூடிய ரெஸ்டோ பார் எனப்படும் உணவக வசதியுடன் கூடிய மதுக்கூடங்களுக்கு அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக செய்திகள் பரவின. தற்போது இயங்கி வரும் சில கிளப்கள் (FL2, FL3 உரிமம் கொண்டவை) மூலம் அரசுக்குச் சரியான மதிப்பு கூட்டு வரி கிடைப்பதில்லை என்றும், இதனால் வரியுடன் கூடிய முறையான ரெஸ்டோ பார்களை விரிவுபடுத்தி அரசின் வருவாயை உயர்த்த டாஸ்மாக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் ஊடக வட்டாரங்களில் கூறப்பட்டது.
இந்தத் தகவல் நேற்று சமூகவலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், ரெஸ்டோ பார் அமைக்கும் திட்டம் குறித்து டாஸ்மாக் நிர்வாகமோ அல்லது தமிழக அரசோ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஊடகங்களில் வெளியானவை அனைத்தும் அதிகாரப்பூர்வமற்ற வெறும் தகவல்கள் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
