தொடர்புடைய செய்திகள்
- முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 பேர் மிஸ்ஸிங்!. எனக்கு வருத்தம்!.. சமுத்திரக்கனி ஃபீலிங்!..
- விவாகரத்து வழக்கு!. விஜயை வீடியோ காலில் ஆஜராக நீதிமன்றத்தம் உத்தரவு!..
- விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!... இதுதான் காரணமா?..
- சங்கீதா தொடர்ந்த விவாகாரத்து வழக்கு!.. நீதிமன்றத்தில் இன்று ஆஜராவாரா விஜய்?..
- மனைவி.. மகன்.. மகள்.. குடும்பத்துக்கே கடன் கொடுத்துள்ள விஜய்!.. வேட்புமனுவில் தகவல்!..
சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கு!.. விஜய் நேரில் ஆஜராவாரா?...
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவரின் மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதுவும் விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார்.. எவ்வளவோ சொல்லியும் அந்த உறவை அவர் விடவில்லை.. பொருளாதார ரீதியாக என்னை முடக்கினார்.. எனது சுதந்திரத்தை பறித்தார் என்றெல்லாம் சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் விஜயோ அது ஒன்னும் அவ்வளவு வொர்த் இல்லை என்று லெப்ட் ஹேண்டில் டீல் செய்தார். இதையடுத்து விஜயை பலரும் கடுமையாக விமர்சனமும் செய்தனர்..
கணவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா தொடர்ந்து வழக்கு செங்கல்பட்டு உடுமலை நீதிமன்றத்தில் ஜூன் 15 ஆம் தேதி இன்று காலை விசாரணைக்கு வந்தது. முதல்வர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த விசாரணையில் ஆஜராவார்கள் என சொல்லப்பட்டிருந்தது.
ஆனால், இரு தரப்பிலும் வக்காலத்தை தாக்கல் செய்ய சொன்ன நீதிபதி வருகிற ஆகஸ்டு 7ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். இருதரப்பும் வக்காலத்தை தாக்கல் செய்துவிட்டால் ஆகஸ்டு 7ம் தேதி விஜய், சங்கீதா இருவரும் வீடியோ கான்பிரஸ் மூலம் ஆஜரவார்கள் எனத்தெரிகிறது.
