1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. samuthirakani feeling bad for vijay family

முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 பேர் மிஸ்ஸிங்!. எனக்கு வருத்தம்!.. சமுத்திரக்கனி ஃபீலிங்!..

samuthirakani
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்து தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் மாறி இருப்பவர் விஜய். இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலில் களமாட துவங்கினார். அவர் மீது பல விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் வந்தது.

ஆனாலும் மக்களை நம்பி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டார். தேர்தல் முடிவில் 108 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆட்சியமைக்க 10 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவோடு தவெக தற்போது ஆட்சி அமைத்திருக்கிறது..

இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி ஒரு சினிமா விழாவில் பேசியபோது விஜய் முதல்வர் ஆனதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் ‘முதலமைச்சர் விஜய் முதல்வராக பதவி ஏற்றதை நாடே பார்த்தது.. நானும் பார்த்தேன்.. அ நேரம் முன் வரிசையில் ஒரு மூன்று பேர் மிஸ்ஸிங். அது எனக்கு பெரிய வருத்தமாக இருந்தது.

உங்களை தோற்கடிக்க நினைத்த எதிர்க்கட்சிகளை கூட நேரில் சந்தித்து அன்பு பாராட்டினீர்கள். உங்களை சில கோடி இளைஞர்கள் பின் தொடர்கிறார்கள்.. அவர்களுக்கு தங்களின் குடும்பம், குழந்தைகள் பற்றிய முக்கியத்துவம் தெரிய வேண்டும்.. அதை நீங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன்’ எனக் கூறியிருக்கிறார்.

விஜயின் மனைவி சங்கீதா மற்றும் இரண்டு குழந்தைகள் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதால் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.. இதைத்தான் சமுத்திரக்கனி குறிப்பிட்டு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் அவசர ஆலோசனை!