1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ct nirmal kumar explain why vijay did not meet eps

பழனிச்சாமியை விஜய் ஏன் சந்திக்கவில்லை?!.. அமைச்சர் சி.டி நிர்மல் குமார் விளக்கம்..

eps vijay
சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே, 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது. அந்த எல்லா கட்சிகளுமே தவெகவை ஆதரித்தன. இதன் காரணமாக விஜயும் முதலமைச்சராக மாறியிருக்கிறார்.
மேலும் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தி கொண்ட 24 எம்.எல்.ஏக்களும் தவெகவை ஆதரித்து சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தார்கள்..

அதற்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை முதல்வர் விஜய் சந்தித்தார். அடுத்தநாள் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சி.வி சண்முகம், பி.எஸ் வேலுமணி ஆகியோரையும் விஜய் நேரில் சென்று சந்தித்தார். இது சர்ச்சையை கிளப்பியது..

ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே விஜய் இவர்களை சந்தித்திருக்கிறார் என பலரும் பேசினார்கள். ஒருபக்கம் மு.க ஸ்டாலின், வைகோ, சீமான் போன்றவர்களை சந்தித்த விஜய் ஏன் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் இதுபற்றி விளக்கமளித்துள்ள அமைச்சர் சி.டி நிர்மல் குமார் ‘ஒரு சில பேரை ஒரு சில சூழ்நிலையில் சந்தித்தால் அது சரியாக இருக்காது.. அது மக்களுக்கும் எதிராக இருக்கும்.. அதனால் சந்திப்பு ஏற்பாடு செய்யப்படவில்லை’ எனக் கூறியிருக்கிறார்..