சவுக்கு சங்கர் அலுவலகத்தை திறந்துவைத்த சிம்பு!.. வைரல் போட்டோஸ்!..
கடந்த பல வருடங்களாகவே ஆளும் கட்சி பற்றி பரபரப்பான தகவல்களை தெரிவித்து பல அரசியல்வாதிகள் சோதனைக்கு உட்படுத்தபட்டதற்கு காரணமாக இருந்தவர் சவுக்கு சங்கர். ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறையில் வேலை செய்தவர் என்பதால் அதிகாரிகள் மூலமாக தகவல்களை பெற்று தன்னுடைய யுடியூப் சேனலில் பேசி வருகிறார். கடந்த திமுக ஆட்சியின் போது பல ஊழல்களை சவுக்கு சங்கர் வெளியே சொன்னார்.
இதனால் பலமுறை இவர் கைது செய்யப்பட்டார். இவரின் வீட்டில் மலத்தை ஊற்றினார்கள். சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் போட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் அவரின் தாயாரும் மரணமடைந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பின் சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவான கருத்துக்களை சவுக்கு சங்கர் பேசி வருகிறார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் புதிய அலுவலகத்தை நடிகர் சிம்பு திறந்து வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சவுக்கு மீடியா தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறது.
தற்போது முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவான கருத்துக்களை சவுக்கு சங்கர் பேசி வருகிறார். இந்நிலையில், சவுக்கு சங்கரின் புதிய அலுவலகத்தை நடிகர் சிம்பு திறந்து வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சவுக்கு மீடியா தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டிருக்கிறது.
