தொடர்புடைய செய்திகள்
- கரூர் நெரிசல் வழக்கு!.. திமுகவுக்கு மூக்குடைப்பு!.. உச்சநீதிமன்றம் கண்டிப்பு...
- கோர்ட்டில் கேஸ் போட்ட திமுக!.. விஜய் கரூருக்கு போக முடியுமா?.. இன்னைக்கு தெரியும்..
- தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. செந்தில் பாலாஜி இன்று ஆஜராவாரா?!..
- தவெக ஆட்சியை கவிழ்த்தே தீருவோம்.. சீனியர் திமுக பேச்சை கேட்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறதா ஜூனியர் டீம்?
- கொள்கை தலைவர்னு சொன்னா போதுமா?!.. விஜயை விளாசிய சத்யராஜ்!..
விஜயை அரெஸ்ட் பண்ணியிருந்தா இது நடந்திருக்குமா?!.. அனிதா ராதாகிருஷ்ணன் ஆதங்கம்!..
தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்றிருந்தபோது அவரை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு அதில் பலரும் சிக்கினார். அதில் 41 பேர் உயிரிழந்தனர். அப்போது விஜய் அங்கிருந்து கிளம்பி திருச்சி விமான நிலையம் வந்து விமானம் மூலம் சென்னை வந்துவிட்டார்.
41 பேர் உயிரிழந்த சம்பத்திற்கு விஜய்தான் காரணம் என திமுகவினர் பேசினார்கள். விஜய் கரூருக்கு தாமதமாக சென்றதே காரணம் என அப்போதைய முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசினார். இது விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதோடு கரூர் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சாதி இருப்பதாக முதல்வர் விஜயும், ஆதவ் அர்ஜுனா போன்ற தவெக அமைச்சர்களும் நம்புகிறார்கள்..
சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூரில் போலீஸ் உதவியுடன் திமுக பொதுமக்களை கொன்று குவித்தது என பேசினர். இது திமுகவுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுக தலைவர் முக ஸ்டாலின் இளகிய மனதுக்காரர். கரூர் சம்பவத்தின் போது ஜோசப் விஜய் செய்த தவறுக்கு அவரை திருச்சியில் வைத்து கைது செய்திருக்க வேண்டும்.. அப்படி செய்திருந்தால் எல்லாம் சரியாக நடந்திருக்கும்.. அதேபோல் ஆதவ் அர்ஜுனாவையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். இதை செய்யாமல் எங்கள் தலைவர் பொறுத்துக் கொண்டார்.. அதனால்தான் கரூர் சம்பத்திற்கு போலீஸ்தான் காரணம்.. முட்டாள் முதல்வர் என்றெல்லாம் இப்போது பேசுகிறார்கள்.
41 பேர் உயிரிழந்த சம்பத்திற்கு விஜய்தான் காரணம் என திமுகவினர் பேசினார்கள். விஜய் கரூருக்கு தாமதமாக சென்றதே காரணம் என அப்போதைய முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பேசினார். இது விஜய்க்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதோடு கரூர் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சாதி இருப்பதாக முதல்வர் விஜயும், ஆதவ் அர்ஜுனா போன்ற தவெக அமைச்சர்களும் நம்புகிறார்கள்..
சில நாட்களுக்கு முன்பு ஒரு விழாவில் பேசிய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கரூரில் போலீஸ் உதவியுடன் திமுக பொதுமக்களை கொன்று குவித்தது என பேசினர். இது திமுகவுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
