1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. china couples spent seven corers for 455 children

சேமிப்பு பணம் ரூ.7 கோடி! 455 குழந்தைகளின் மருத்துவ செலவுக்கு கொடுத்த சீன தம்பதி!...

china
இந்த உலகில் எல்லோருக்கும் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைந்து விடுவதில்லை. எப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்தாலும் அதை மகிழ்ச்சியாக மாற்றிக் கொள்பவர்கள் சிலர் மட்டுமே.. அதிலும் திருமணமான தம்பதிக்கு குழந்தை இல்லை என்பது ஒரு பெரும் சோகம்தான்.
தங்களுக்கு குழந்தை இல்லையே என்கிற கவலையும், ஏக்கமும் அவர்களை கவலை கொள்ள செய்கிறது. இதற்காக தற்போது நவீன மருத்துவ சிகிச்சைகள் வந்து விட்டாலும் எல்லோருக்கும் அது பலனளிப்பது இல்லை..

இந்நிலையில்தான், சீனாவில் குழந்தை இல்லாத ஒரு தம்பதி தங்களின் சேமிப்பு பணத்தை மற்ற குழந்தைகளுக்கு செலவு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவில் வசித்து வருபவர்கள் டு - லு தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகிவிட்டாலும் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதையடுத்து தங்களின் வாழ்நாள் சேமிப்பான ரூ.7 கோடியை பிறவியிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட 455 குழந்தைகளின் மருத்துவத்திற்கு செலவுக்கு கொடுத்து அந்த குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறார்கள்..

அவர்கள் இருவரும் உயிரிழந்த நிலையில் அந்த குழந்தைகளை பராமரித்து வந்த அறக்கட்டளை நிறுவனம் இந்த செய்தியை உலகிற்கு சொல்லியிருக்கிறது.