1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. son killed his mother for property

வளர்ப்பு தாயை கரெண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்த மகன்... அதிர்ச்சி சம்பவம்..!

வளர்ப்பு தாய்
ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் வளர்ப்பு தாயை கரெண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்த மகன் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
 
ஆந்திரா மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் சங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த லட்சுமிபாய் என்பவர், தனது கணவரின் இரண்டாவது மனைவியின் மகனான தத்து நாயக்கை சிறு வயது முதல் வளர்த்து வந்துள்ளார். 
 
தத்து நாயக், சரியாக படிக்காமல் வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வந்த நிலையில் அடிக்கடி லட்சுமிபாயுக்கு சொந்தமான வீட்டை தனக்கு எழுதி வைக்குமாறு தத்து நாயக் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.
 
இதற்கு லட்சுமிபாய் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர், லட்சுமி பாயிற்கு கரண்ட் ஷாக் வைத்து கொடுமைப்படுத்தி இருக்கிறார். அப்போதும் லட்சுமிபாய் மறுத்ததால், ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்துள்ளார்.  
 
இந்த சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தத்து நாயக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஊடகம், வழக்கறிஞர் ஸ்டிக்கர் வாகனங்களில் பயன்படுத்த தடை இல்லை: ஆனால் ஒரு நிபந்தனை..!