1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk ex minster subramani arguing with tn police

காலை கடனை முடிச்சிட்டு வருவார்!. உதயநிதி வீட்டில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த மா.சுப்பிரமணி!..

udhyanidhi stalin
திமுக சார்பில் தஞ்சையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யை நடிகை திரிஷாவுடன் இணைத்து மிகவும் ஆபாசமாக பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டுக்கு இன்று காலை தஞ்சாவூர் போலீஸ் அதிகாரிகள் சென்று அவரை கைது செய்யும் முயற்சியில் இறங்கினர்..

அப்போது அங்கே வந்த திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். நாங்கள் உடனடியாக உதயநிதியை அழைத்து செல்ல வேண்டும் என போலீசார் கூற ‘இப்போதுதான் உதயநிதி எழுந்திருக்கிறார்.. அவர் வீட்டில்தானே இருக்கிறார்.. தஞ்சாவூர் வரை நீங்கள் கூட்டி செல்ல போகிறீர்கள்.. அவர் காலை கடன்களை முடித்துவிட்டு வரவேண்டாமா என வாக்குவாதம் செய்தார். எனவே, போலீசார் சிறிதுநேரம் அவகாசம் கொடுத்தனர்.

அதன்பின் உதயநிதி உள்ள இருந்து வெளியே வந்து வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்துவிட்டு போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அதன்பின் போலீசார் உதயநிதியை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
ராமேஸ்வரம் கோவிலில் ரீல்ஸ் எடுக்கும் பெண்கள்.. பக்தர்கள் கடும் கோபம்..