1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. nivetha pethuraj twitter poest after udhyanidhi arrest

உதயநிதி கைது எதிரொலி!.. நடிகை நிவேதா பெத்துராஜ் போட்ட பதிவு...

nivetha pethuraj
முதல்வர் விஜயை நடிகை திரிஷாவுடன் இணைத்து மிகவும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்று காலை 10:30 மணி அளவில் தஞ்சாவூர் போலீஸார் செய்தனர்.

கைது செய்யப்பட்ட பின் அவர் தஞ்சாவூருக்கு வேனில் கொண்டு செல்லப்பட்டார். உதயநிதியின் கைது திமுகவினரை கொந்தளிக்க வைத்திருக்கிறது. தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

ஒருபக்கம் உதயநிதியை கொண்டு செல்லும் வேனை முற்றுகையிடும் போராட்டத்திலும் திமுகவினர் இறங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் தளத்தில் ‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும்’ என்கி|ற திருக்குறளை பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு அர்த்தம் ‘ஒருவரை நேரில் பார்க்கும் போது புகழ்ந்து பேசி விட்டு, அவர் இல்லாத சமயத்தில் அவதூறாக பேசுவது என்பது மிகவும் இழிவானது. அதற்கு உடனடியாக இறந்து போவதே மேல்’ என்பதே அர்த்தம். எனவே, நிவேதா பெத்துராஜ் யாரை விமர்சித்திருக்கிறார் என்பது தெரியவில்லை.

ஏற்கனவே உதயநிதியையும், நிவேதா பெத்துராஜையும் இணைத்து சில கிசுகிசுக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. நிவேதாவுக்கு துபாயில் உதயநிதி வீடு வாங்கி கொடுத்துள்ளார் என பிரபல பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் கூறியிருந்தார். ஆனால், இந்த செய்தியை நிவேதா பெத்துராஜ் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
உதயநிதி கைது!. தமிழகமெங்கும் திமுகவினர் போராட்டம்!.. அதிரடிப்படையினர் குவிப்பு...