உதயநிதி ஸ்டாலின் கைது.. நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்...
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்பிக்கள் தீவிர முழக்க போராட்டத்தில் ஈடுபட்டது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கைது செய்யாதே, கைது செய்யாதே, உதயநிதி ஸ்டாலினை கைது செய்யாதே" என அவர்கள் நாடாளுமன்ற நுழைவு வாயிலில் கோஷங்களை எழுப்பினர்.
இப்போராட்டத்தில் டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா, ஆ. ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட முக்கிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
முதல்வர் விஜய் மற்றும் நடிகை குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படும் வழக்கில், சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாளே எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்திருப்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று திமுக தரப்பில் கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மக்கள் பிரச்சனைகள் குறித்து அவர் கேள்வி எழுப்பவிருந்த நிலையில், திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களிலும் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ள இந்த குரல் தற்போதைய அரசியல் களத்தில் ஆளுங்கட்சியான தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையேயான மோதலை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
Edited by Siva
