1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. satelite found the reason behind nepal flood

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

nepal
நேபாளத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளம் அந்த நாட்டையே உருக்குலைத்துப் போட்டிருக்கிறது. குறிப்பாக நேபாளத்திற்கு மேலே உள்ள மலைகளில் இருந்து உருவான வெள்ளம் திடீரென நேபாளத்தில் இறங்கியது. இதன் காரணமாக ஏறி, ஆறு உள்ளிட்ட பல நீர்நிலைகளிலும் அதிக அளவில் வெள்ளம் வெளியாகி வீடுகளையும், வாகனங்களையும், கட்டிடங்களையும், மனிதர்களையும் அடித்து சென்றது.

கிட்டத்தட்ட 1500 க்கும் மேற்பட்டவர் இதில் இறந்து போயிருக்கலாம். என கணிக்கப்படுகிறது. இதில், பல இந்தியர்களும் அடக்கம். அதேபோல், 100க்கும் மேற்பட்ட தமிழர்களும் நேபாள வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார்கள். அதில், 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

முதலில் மேக வெடிப்பு காரணமாக அதிக அளவில் மழை பொழிந்து இந்த வெள்ளம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. ஆனால் செயற்கைக்கோள் மூலம் நடந்த சம்பவங்களை ஆய்வு செய்தபோது பனிப்பாறைகள் உடைந்ததே இதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்திருக்கிறது..

நேபாளம் சீனா வெள்ளையை கடக்கும் பகுதிக்கு வடகிழக்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் பனிப்பாறை உடைப்புகள் ஏற்பட்டு அதிலிருந்து வெளியான நீர் ஆற்றில் கலந்து தான் நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..