1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. karunas says cm vijay given one crore fund

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

karunas vijay
நடிகர் விஜய் கட்சி துவங்கிய போது அவரை கடுமையாக விமர்சித்தவர்களில் கருணாஸும் ஒருவர். இவர் முக்குலத்தோர் புலிப்படை என்கிற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஜெயலலித மற்றும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகக இருந்தபோது இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் இவர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்ட போது அவரை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார் கருணாஸ். விஜய்க்கு கூடும் கூட்டம் ஒட்டக மாறாது என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தார். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து விட்டது.. விஜயும் முதலமைச்சராகிவிட்டார்..

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய கருணாஸ் ‘திருமலை பட சமயத்தில் நான் விஜய் சாருடன் ரொம்ப நெருக்கமா இருந்தேன். அவரை பார்க்க எங்க சினிமா சங்கத்திலிருந்து போனோம்.. அவரை நான் அரசியல்ரீதியாக நிறைய விமர்சனம் பண்ணியிருக்கேன். ஆனா என்னை பார்த்தவுடனே ‘உங்க பையன் எப்படி இருக்கார்?’ என்றுதான் கேட்டார்.

என்ன இருந்தாலும் அவர் எங்க சங்க உறுப்பினர்தானே.. எங்க சங்கத்திலிருந்து புரட்சித் தலைவர் முதலமைச்சராகியிருக்கிறார்.. ஜெயலலிதா அம்மா முதலமைச்சர் ஆகியிருக்காங்க.. இப்ப விஜய் சிஎம் ஆகியிருக்கார்.. அதை தாண்டி நடிகர் சங்கத்துக்கு விஜய் ஒரு கோடி நன்கொடை கொடுத்தார்.. அரசியல் வேற.. இது வேற’ என தெரிவித்தார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...