வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:32 IST)

மன்கடிங் முறையால் ஸ்பிரிட் ஆஃப் தெ கேம் பாதிக்கப்படுவதில்லை – அஸ்வினுக்கு ஆதரவாக முன்னாள் இந்திய கிரிக்கெட்டர்!

மன்கடிங் முறை மூலம் ஜோஸ் பட்லரை அவுட் ஆக்கிவிட்டு சர்ச்சையில் சிக்கிய அஸ்வினுக்கு ஆதரவாக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த 12 ஆவது ஐபிஎல் போட்டி தொடரின் போது ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இதையடுத்து அஸ்வின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அஸ்வின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ‘நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் உள்ள விதிமுறைகளின்படிதான் செயல்பட்டேன், 'மன்கட் 'அவுட் செய்தேன். பேட்ஸ்மேன்கள்தான் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுமையான உரிமைகளின் அடிப்படையில்தான் பட்லரை நான் ஆட்டமிழக்கச் செய்தேன். இதில் எந்தவிதமான வாக்குவாதத்துக்கும் இடமில்லை. இதில் கிரிக்கெட் ஸ்பிரிட் கொல்லப்பட்டது எப்படி எனக்குத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில் இதுகுறித்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத். அதில் ‘பந்துவீசும் போது பவுலர் பேட்ஸ்மேன் மீதுதான் கவனம் செலுத்துவார். அதனால் ரன்னர் முனையில் நிற்பவர் கிரீஸில் நிற்கும் தன் வேலையை செய்யவேண்டும். அதனால் அப்போது கருணையை எதிர்பார்க்கக் கூடாது. இதற்குள் ஸ்பிரிட் ஆஃப் த கேம் என்பதை கொண்டு வராதீர்கள். ரன்னர்தான் ஸ்பிரிட் ஆஃப் த கேமோடு இருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.