வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (10:36 IST)

37 லட்சத்தை நெருங்கிய பாதிப்புகள்! – 69 ஆயிரத்தை தாண்டிய பலி!

இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில்  ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 69 ஆயிரத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,91,166 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 819 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த இறப்பு எண்ணிக்கை 65,288 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 65,081 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 28,39,883 ஆக உயர்ந்துள்ளது.