1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (13:44 IST)

வாட்ஸ் அப் குழுவில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வழக்கறிஞர் கைது!

வாட்ஸ் அப் குழுவில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வழக்கறிஞர் கைது!
வாட்ஸ் அப் மூலம் குழு அமைத்து ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த வழக்கறிஞர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் 
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்த நிலையில் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்யப்பட்டது 
 
அப்போது புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் வாட்ஸ்அப் குழு மூலம் ஆன்லைனில் லாட்டரி விற்பனை நடந்தது தெரியவந்தது 
 
இதனை அடுத்து அவரிடம் செய்யப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பதும் அவர்களில் ஒருவர் வழக்கறிஞர் என்றும் கூறப்படுகிறது.