1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (12:25 IST)

முதல்வரின் உழைப்பு... தேர்தல் முன்னிலை குறித்து ஏ.வ.வேலு

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில் ஏ.வ.வேலு பெருமிதம். 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இந்நிலையில் இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. 
 
8 மாவட்ட கவுன்சிலர், 13 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.  அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஏ.வ.வேலு தேர்தல் முடிவுகள் குறித்து கூறியுள்ளதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைப்பின் பலனை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது என பெருமிதம் கொண்டுள்ளார்.