1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi stalin may arrested again

உதயநீதி மீண்டும் கைது செய்யப்படுவாரா?!... மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை....

udhyanidhi stalin
கடந்த 3ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஜோசப் விஜய் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பின் அவர்கள் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்த தஞ்சாவூர் காவல்துறை அதிகாரிகள் அவரை சென்னையிலிருந்து தஞ்சாவூர் வரை வேனில் அழைத்து சென்று அன்று இரவு அவரை விடுதலை செய்தனர்..

ஒருபக்கம், தவெக தேசிய செய்தி தொடர்பாளர் செல்வகுமார் உதயநிதி மீது நடவடிக்கை வேண்டுமென தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரை விசாரித்த தேசிய மகளிர் ஆணையம் உதயநிதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்திற்கு தற்போது பரிந்துரை செய்திருக்கிறது.

அதன்படி மீண்டும் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உதயநிதி மீண்டும் கைதாவாரா இல்லை நீதிமன்றத்தில் ஜாமீன் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே தர வேண்டும்: பூவுலகின் நண்பர்கள்..