2500 டாஸ்மாக் கடைகள் தனியாரிடம் செல்கிறதா?!.. அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு!...
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ் ரெஸ்டோ பார், தனியார் மயம் ஆக்குவது ஆகியவை குறித்து ஆலோசித்து வருகிறோம்..
இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக்கூறினார். இந்நிலையில் முதல் கட்டமாக 2500 டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக மாற்ற தவெக அரசு தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதல் கட்டமாக நகரப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மது பழக்கத்தை மேலும் அதிகரிக்கும்.. 2500 டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக மாற்றும் முடிவு செய்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அரசே மது விற்பனை செய்கிறது என்று அவமானத்தை போக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. இது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு ஒப்பானது என அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக்கூறினார். இந்நிலையில் முதல் கட்டமாக 2500 டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக மாற்ற தவெக அரசு தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முதல் கட்டமாக நகரப்புறங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசு மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மது பழக்கத்தை மேலும் அதிகரிக்கும்.. 2500 டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக மாற்றும் முடிவு செய்திருந்தால் அது கண்டிக்கத்தக்கது. அரசே மது விற்பனை செய்கிறது என்று அவமானத்தை போக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. இது மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு ஒப்பானது என அவர் கூறியிருக்கிறார்.
