1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (17:33 IST)

இரவுநேர ஊரடங்கு எதிரொலி: சென்னை பார்த்தசாரதி கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

இரவுநேர ஊரடங்கு எதிரொலி: சென்னை பார்த்தசாரதி கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!
இன்று முதல் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் சென்னை பார்த்தசாரதி கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கவிருக்கும் நிலையில் இரவில் யாருக்கும் அனுமதி இல்லை.
 
எனவே பொதுமக்கள் மற்றும் விஐபி கட்டளைதாரர்கள் யாரும் சொர்க்கவாசலை காண்பதற்காக இரவு 8 மணிக்கு மேல் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஜனவரி 13-ஆம் தேதி பொதுமக்கள் காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை மட்டுமே தமிழக அரசின் கொரோனா வைரஸ் வழிகாட்டு முறைகளை பின்பற்றி சொர்க்க வாசலுக்கு சென்று தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.