1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (17:35 IST)

125 பயணிகளுக்கு கொரொனா .உறுதியானதாக வெளியான தகவல்... ''ஏர் இந்தியா ''மறுப்பு

இத்தாலியில் இருந்து வந்த விமானத்தில் முக்கால்வாசி பேருக்கு கொரோனா உறுதியானதாக வெளியான தகவலை ஏர் இந்தியா நிர்வாகம் மறுத்துள்ளது.

உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவலால் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கியுள்ளது. இதனால் உலக நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்துகளும் கடும் கட்டுப்பாடுகளுடனே நடந்து வருகின்றன.

இந்நிலையில் இத்தாலியில் இருந்து பஞ்சாபின் அமித்சரஸ் வந்த விமானம் ஒன்றில் 179 பேர் பயணித்துள்ளனர். அவர்களுக்கு அமித்சரஸ் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது அதில் 125 பேருக்கு கொரோனா உறுதியானதாக வெளியான தகவல்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இத்தாலியில் இருந்து வந்த விமானத்தில் முக்கால்வாசி பேருக்கு கொரோனா உறுதியானதாக வெளியான தகவலை ஏர் இந்தியா நிர்வாகம் மறுத்துள்ளது.

இதுகுரித்து ஏர் இந்தியா தரப்பு கூறியுள்ளதாவது: இத்தாலி – அமிர்தசஸ் இடையே எந்த விமானமும் இயக்கவில்லை என ஏர் இந்தியா தரப்பு தெரிவித்துள்ளது.