தொடர்புடைய செய்திகள்
- மதுபானங்கள் வழங்கும் ஆலைகளுக்கு கூடுதல் வரி.. ரூ.1000 கோடி தமிழக அரசுக்கு வருமானம்..!
- விஜய் பிரெஸ்ஸ மீட் பண்ணனும்னு ரூல்ஸ் இருக்கா?!.. கோபப்பட்ட சிடி நிர்மல்குமார்!..
- செந்தில் பாலாஜிக்கு ஸ்கெட்ச்!.. விரைவில் கைது?.. அதிரடி காட்டும் விஜய்!..
- ஆட்சிக்கு வந்துட்டோம்னு மிரட்டுறீங்களா?!.. செங்கோட்டையனிடம் கோபப்பட்ட பத்திரிக்கையாளர்கள்!..
- தவெக ஆதரவால் எம்பி ஆகிறார் ப்ரவீன் சக்கரவர்த்தி.. தமிழ்நாட்டுக்காக குரல் கொடுப்பேன் என பதிவு...
கட்சி நிதி பேரில் வருடத்திற்கு 1200 கோடி!.. டாஸ்மாக்கில் நடந்த கொள்ளை!..
தமிழகத்தில் தற்போது 4787 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. விஜய் முதலமைச்சர் பதவியேற்றவுடன் 717 கடைகள் மூடப்பட்டது. ஒரு பக்கம் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு தொடர்ந்து விதித்து வருகிறது. இந்நிலையில்தான் தமிழக முதல்வர் விஜய் எடுத்த நடவடிக்கை அதிரடி நடவடிக்கையின் காரணமாக தமிழக அரசுக்கு கூடுதலாக 1200 கோடி வருவாய் கிடைக்கவிருக்கிறது.
அதாவது பிராண்டி விஸ்கி, பீர், ஒயின் பெட்டிகளுக்கான கட்டண வசூல் முறையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை ஹாட் பெட்டிகளுக்கு ரூட் 90, பீர் பெட்டிகளுக்கு ரூ.40, ஒயின் பெட்டிகளுக்கு ரூ.20 என கட்சி நிதியாக மாதத்திற்கு சுமார் 100 கோடி வசூல் செய்து வந்துள்ளனர். அதாவது இந்த தொகை தமிழக அரசுக்கு வர வேண்டிய தொகை. அது அரசு கணக்கில் வரவில்லை.
தற்போது இந்த தொகை நேரடியாக அரசு கணக்கில் சேர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய நடைமுறையால் மாதம் ரூ.100 கோடி என வருடத்திற்கு1200 கோடி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
