1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thirumavalvan still not announced his support

இப்ப சொல்லமாட்டேன்!. 4 மணிக்கே மேல் சொல்றேன்... இழுத்தடிக்கும் திருமாவளவன்..

vijay thiruma
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் ஆட்சியமைக்க மேலும் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவைப்பட்டது. எனவே காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருந்தார்.

அதை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு கொடுத்து விட்டார்கள் எனவே தவெகவின் பலம் 116ஆக உயர்ந்திருக்கிறது. ஆட்சியமைக்க இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் விசிக தலைவர் திருமாவளவன் இதுவரை தனது முடிவை சொல்லாமல் இருக்கிறார்..

கடந்த வியாழக்கிழமை இரவு செய்தியாளர்களிடம் பேசியபோது ‘விஜய் கடிதம் எழுதியிருக்கிறார். நாளை காலை நிர்வாகிகளிடம் ஆலோசித்துவிட்டு இதுபற்றி பதில் சொல்வொம் என்றார்.. அதன்பின் இன்று மாலைதான் நிர்வாகிகளிடம் பேசப்போகிறோம் என நேற்று காலை சொன்னார். அதோடு கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவுகளையும் தெரிந்து கொண்டு நாங்கள் முடிவை சொல்வோம் என கூறியிருந்தார். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவுக்கு  தரவு தெரிவித்துவிட்ட பின்னரும் திருமாவளவன் அமைதியாகவே இருக்கிறார்..

இன்று காலை திருமாவளவன் தனது முடிவை சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனவே தவெந்க தொண்டர்களும், செய்தியாளர்களும் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகம் முன்பு குவிந்தார்கள். இப்போது ‘இப்போது எங்கள் முடிவை சொல்லப்போவதில்லை.. எங்கள் தலைவர் திருமாவளவன் இன்று மாலை 4 மணிக்கு மேல் தனது முடிவை அறிவிப்பார்’ என  விசிக நிர்வாகிகள் கூறினர்.எதற்காக திருமாவளவன் இப்படி இழுத்திருக்கிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது..
அடுத்த கட்டுரையில்
ஆட்சி அமைக்கும் கட்சிக்கு என் வாழ்த்துக்கள்!.. பழனிச்சாமி டிவிட்!. பின் வாங்கியதா அதிமுக?..