1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sundar c says he will beat ptr in madurai

அவர் என்ன எம்.ஜி.ஆரா?.. பி.டி.ஆர்.தானே!.. சுந்தர்.சி சவால்!..

sundar c
உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், அரண்மனை, கலகலப்பு உள்ளிட்டட பல திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் சுந்தர்.சி. நடிகை குஷ்பூவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இரு மகள்கள் இருக்கிறார்கள். திரைப்படங்கள் இயக்குவதோடு மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார். தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளது. அடுத்த சில படங்களிலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்தான், திடீரென அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR)  திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். எனவே, அந்த தொகுதியில் சுந்தர்.சி வெற்றிபெறுவாரா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்நிலையில், ‘பி.டி.ஆர் போட்டியிடும் தொகுதியில் நீங்கள் போட்டியிடுகிறீர்களே. உங்களால் வெற்றி பெற முடியுமா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ‘அவர் என்ன எம்ஜிஆரா?.. பி.டி.ஆர்.தானே.. நம் அனைவரும் சேர்ந்து ஒரு கை பார்த்து விடலாம்’ என்று கூறினார் சுந்தர்.சி.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நெல்லை, தூத்துக்குடியில் விஜய் நாளை பிரச்சாரம்!.. ஏற்பாடுகள் தீவிரம்!...