1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. srilanka former cricket player shot dead

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுட்டுக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

இலங்கை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியில் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தம்மிகா நிரோஷனா. முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்த நிலையில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அவரை கொன்றவர் தப்பி ஓடி விட்டதாகவும் அவர் யார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது/ இலங்கை போலீசார் கொலை செய்யப்பட்ட தம்மிகா நிரோஷனா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் கும்பல் மோதலால் நடந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக இலங்கை போலீஸ் அறிவித்துள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் குற்றவாளி பிடிபடுவார் என்றும் இலங்கை போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கன்னடர் பணி ஒதுக்கீடு மசோதாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! ஐடி நிறுவனங்களுக்கு ஆந்திரா அழைப்பு..!!