1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Saidapet MLA son died in corona

திமுக எம் எல் ஏவின் மகன் கொரோனாவால் உயிரிழப்பு – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

கொரோனா
திமுக சைதாப்பேட்டை எம் எல் ஏ மா. சுப்பிரமணியத்தின் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

கொரோனா காரணமாக பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இதில் அரசியல் பிரமுகர்களும் தப்பவில்லை. திமுக எம் எல் ஏ ஜெ அன்பழகன் மற்றும் அமமுக பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் கொரோனாவால் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது சைதாப்பேட்டை எம் எல் ஏ மா. சுப்பிரமணியத்தின் இரண்டாவது மகன் அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

மா க சுப்பிரமணியத்துக்கு 2 வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரது குடும்பத்தில் அவர் மனைவி மற்றும் இளைய மகன் அன்பழகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து இருவரும் சிகிச்சை பெற்றனர். இதில் அன்பழகன் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
 
 
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வு முடிவுகள் - திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது!!