1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Registry Offices will be in operation from the 20th

20ஆம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும்- பதிவுத்துறை தலைவர்

Registry Offices will be in operation from the 20th
தமிழகத்தில் கொரொனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வரும் மே 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கபட்டுள்ளது. இந்நிலையில், 20ஆம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :

பணிக்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாளொன்றுக்கு 24 டோக்கன்கள் வரை மட்டுமே பதிவுசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவராக இருந்தால் பதிவு பணிகள் செய்யப்படாது எனவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அலுவலகம் இயங்கினால் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
மாற்றுத்திறனாளி மீது மோதிய கார் ! பரவலாகும் வீடியோ