தொடர்புடைய செய்திகள்
- 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம்!.. அமைச்சர் ராஜ்மோகன் அறிமுகம்!..
- ஃபீல் பண்ணாதீங்க!.. இப்பவும் நம்ம ஆட்சிதான்!. முக ஸ்டாலின் பேச்சு...
- விஜய் யாருன்னு இன்னும் ஒரு வருஷத்துல தெரியும்! - அமைச்சர் சிடி நிர்மல்குமார்
- விஜய்யின் அசுர வேகம்.. தாக்கு பிடிக்க முடியாமல் திமுக திணறல்.. நடைப்பயணம் செல்கிறாரா உதயநிதி?
- முதல்வர் விஜய்க்கு 17 துறை ஒதுக்கீடு!.... வெளியான அமைச்சரவை பட்டியல்!..
அரசியலில் இருந்து ஓய்வு!.. திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுத்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்..
திமுக ஆட்சியில் நிதி மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவரும், மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளராகவும் இருந்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். மதுரை மத்திய தொகுதில் இவர் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், அரசியலிலிருந்து விலகுவதாக தற்போது அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் வெளிநாட்டில் இருந்த ஒரு நீண்டகால பணியை விட்டு, சமூக முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்குடன் தேர்தல் அரசியலுக்கு வந்தேன்.
என் முதல் நேர்காணலிலேயே, சமூகநீதி இயக்கத்தின் வரலாறு மற்றும் நீதிக்கட்சிக் காலத்திலிருந்து அதன் பங்களிப்புகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மதுரை மக்களுக்காக மேலும் பல செயல்களை செய்ய வேண்டும், என் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் அமைக்க வேண்டும் என்ற மூன்று தனிப்பட்ட நோக்கங்களையும் கூறியிருந்தேன்.
மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய 60 வயதை எட்டியதும் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகி, 2016க்கு முன்பு இருந்ததைப் போல சர்வதேச அளவிலான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்ற எண்ணமும் எனக்கிருந்தது. என் கட்சி, மதுரை மத்திய தொகுதி மற்றும் தமிழ்நாட்டிற்காக (ஒரு அமைச்சராக) பல்வேறு வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியதில் நான் திருப்தி அடைகிறேன். என் மூன்று தனிப்பட்ட நோக்கங்களையும் பெரும்பாலும் நிறைவேற்றியுள்ளேன்.
ஆனால், நான் தொடங்கிய பல திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையிலும், பின்னர் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையிலும் இருந்தபோது தொடங்கிய பல மாற்றங்கள் இன்னும் முழுமையடையவில்லை.
மதுரைக்காக முழுமையான பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள், மத்திய சிறை மாற்றம், மதுரை மெட்ரோ போன்ற திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதனால், 2026 இல் அரசியலை விட்டு விலகும் எண்ணத்தில் இருந்த என் திட்டத்தை ஒத்திவைத்து, மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்து தொடங்கிய பணிகளை முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் தேர்தல் முடிவால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த 10 ஆண்டுப் பொதுச்சேவை பயணத்தில் நான் ஏற்படுத்திய தாக்கங்களை சில அம்சங்களில் பதிவு செய்ய விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகளின் அடிப்படையில் நான் தோல்வியடையுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. தொகுதியில் நான் செய்த பணிகளுக்கான ஆதாரங்கள் எங்கும் இருக்கின்றன.
என் எதிரணியினரின் வேட்பு மனுக்களில் தவறுகள் இருந்ததாக தகவல் கிடைத்தது. இருந்தாலும், ஜனநாயக செயல்முறையை பாதிக்க விரும்பாமல் நான் சட்டரீதியான சவால்களை முன்வைக்கவில்லை. நான் பணம் கொடுத்து வாக்கு வாங்காத ஒருவராகவும், பொய்ப் பிரச்சாரம் செய்யாத ஒருவராகவும் தேர்தலை சந்தித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்கு வாக்களித்த 44,286 மக்களுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவன்.
த.வெ.க 25 சதவீத வாக்குகளை பெற்றால் புதிய அரசியல் யுகம் தொடங்கும் என நினைத்தேன். ஆனால் அது 35% வரை செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை. மாற்றம் தவிர்க்க முடியாதது. தமிழ்நாட்டில் த.வெ.க அரசு அமைந்திருந்தாலும், அது தமிழ்நாட்டு மக்களின் அரசே. புதிய முதலமைச்சர் விஜய்க்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் நான் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.
அரசு இயந்திரத்தில் பழைய நடைமுறைகள் தொடரும் மனப்பான்மையை மாற்றி, புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் முன்னேற்றம் தடைப்படும்.
10 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச்சேவையில் இருந்த பிறகு, சில வாரங்கள் தனிப்பட்ட ஓய்வெடுக்க விரும்புகிறேன். முன்பு நேரமின்மையால் செல்ல முடியாத இடங்களுக்கு பயணம் செய்யவும், புத்தகம் எழுதவும், உடல்நலத்தை கவனிக்கவும் இந்த நேரத்தை பயன்படுத்தப் போகிறேன். அடுத்த சில வாரங்களில், நான் செய்த முக்கிய பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து மேலும் விவரங்களை பகிர்வேன். நான் மீண்டும் வருவேன் புத்துணர்ச்சியுடன் என தெரிவித்திருக்கிறார் .
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் வெளிநாட்டில் இருந்த ஒரு நீண்டகால பணியை விட்டு, சமூக முன்னேற்றத்திற்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கும் பணியாற்ற வேண்டும் என்ற நோக்குடன் தேர்தல் அரசியலுக்கு வந்தேன்.
என் முதல் நேர்காணலிலேயே, சமூகநீதி இயக்கத்தின் வரலாறு மற்றும் நீதிக்கட்சிக் காலத்திலிருந்து அதன் பங்களிப்புகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், மதுரை மக்களுக்காக மேலும் பல செயல்களை செய்ய வேண்டும், என் குடும்பத்திற்கு நல்ல எதிர்காலம் அமைக்க வேண்டும் என்ற மூன்று தனிப்பட்ட நோக்கங்களையும் கூறியிருந்தேன்.
ஆனால், நான் தொடங்கிய பல திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறையிலும், பின்னர் தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையிலும் இருந்தபோது தொடங்கிய பல மாற்றங்கள் இன்னும் முழுமையடையவில்லை.
மதுரைக்காக முழுமையான பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள், மத்திய சிறை மாற்றம், மதுரை மெட்ரோ போன்ற திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. அதனால், 2026 இல் அரசியலை விட்டு விலகும் எண்ணத்தில் இருந்த என் திட்டத்தை ஒத்திவைத்து, மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்து தொடங்கிய பணிகளை முடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால் தேர்தல் முடிவால் அது தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த 10 ஆண்டுப் பொதுச்சேவை பயணத்தில் நான் ஏற்படுத்திய தாக்கங்களை சில அம்சங்களில் பதிவு செய்ய விரும்புகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகளின் அடிப்படையில் நான் தோல்வியடையுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. தொகுதியில் நான் செய்த பணிகளுக்கான ஆதாரங்கள் எங்கும் இருக்கின்றன.
என் எதிரணியினரின் வேட்பு மனுக்களில் தவறுகள் இருந்ததாக தகவல் கிடைத்தது. இருந்தாலும், ஜனநாயக செயல்முறையை பாதிக்க விரும்பாமல் நான் சட்டரீதியான சவால்களை முன்வைக்கவில்லை. நான் பணம் கொடுத்து வாக்கு வாங்காத ஒருவராகவும், பொய்ப் பிரச்சாரம் செய்யாத ஒருவராகவும் தேர்தலை சந்தித்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். எனக்கு வாக்களித்த 44,286 மக்களுக்கும் நான் என்றும் நன்றியுள்ளவன்.
த.வெ.க 25 சதவீத வாக்குகளை பெற்றால் புதிய அரசியல் யுகம் தொடங்கும் என நினைத்தேன். ஆனால் அது 35% வரை செல்லும் என நான் எதிர்பார்க்கவில்லை. மாற்றம் தவிர்க்க முடியாதது. தமிழ்நாட்டில் த.வெ.க அரசு அமைந்திருந்தாலும், அது தமிழ்நாட்டு மக்களின் அரசே. புதிய முதலமைச்சர் விஜய்க்கும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் நான் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.
அரசு இயந்திரத்தில் பழைய நடைமுறைகள் தொடரும் மனப்பான்மையை மாற்றி, புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் முன்னேற்றம் தடைப்படும்.
10 ஆண்டுகள் தொடர்ந்து பொதுச்சேவையில் இருந்த பிறகு, சில வாரங்கள் தனிப்பட்ட ஓய்வெடுக்க விரும்புகிறேன். முன்பு நேரமின்மையால் செல்ல முடியாத இடங்களுக்கு பயணம் செய்யவும், புத்தகம் எழுதவும், உடல்நலத்தை கவனிக்கவும் இந்த நேரத்தை பயன்படுத்தப் போகிறேன். அடுத்த சில வாரங்களில், நான் செய்த முக்கிய பணிகள் மற்றும் சாதனைகள் குறித்து மேலும் விவரங்களை பகிர்வேன். நான் மீண்டும் வருவேன் புத்துணர்ச்சியுடன் என தெரிவித்திருக்கிறார் .
