செவ்வாய், 10 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 ஜனவரி 2026 (20:22 IST)

யாருடன் கூட்டணி?.. தாமதிக்கும் தேமுதிக!.. பின்னணியில் நடக்கும் பேரம்!...

யாருடன் கூட்டணி?.. தாமதிக்கும் தேமுதிக!.. பின்னணியில் நடக்கும் பேரம்!...
நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்ட தேமுதிக தனித்துப் போட்டி, அதிமுகவுடன் கூட்டணி, மக்கள் நல கூட்டணி என மாறி மாறி பயணித்தது. அதேநேரம் கலைஞர் கருணாநிதி மீது அரசியல்ரீதியாக விஜயகாந்துக்கு கோபம் ஏற்பட்டதால் திமுகவுடன் தேமுதிக ஒருமுறை கூட கூட்டணி அமைக்கவில்லை. அதன் காரணமாகவே 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக தோற்றுப் போனது.

தற்போது விஜயகாந்த் மறைந்த நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணின் கூட்டணியில் இணைந்து தேமுதிக தேர்தலை சந்தித்தது. அப்போது தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டு கொடுப்பதாக பாஜக சொல்லியிருந்தது.. ஆனால் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றதால் ராஜ்ய சீட்டை பாஜக கொடுக்கவில்லை. எனவே அதிமுக - பாஜக கூட்டணி மீது பிரேமலதாவுக்கு கோபம் இருந்தது.

தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுக- பாஜக கூட்டணிக்குள் தேமுதிகவை கொண்டு முயற்சி நடைபெற்றது. ஆனால் இப்போது வரை தேமுதிக அந்த கூட்டணியில் இணையவில்லை. இன்று மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பிரேமலதா கலந்து கொள்ளவில்லை.

தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நீடிப்பதற்கு கூட்டணி இறுதி செய்யாமல் இருப்பதேகு காரணம் என சொல்லப்படுகிறது. திமுக, அதிமுக என இரு தரப்பினரிடமும் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். திமுக தரப்பில் ஒற்றை இலக்கில் மட்டுமே சீட் எனவும், அதிமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் சீட் கொடுக்க ஒப்புதல் எனவும் தகவல் கசிந்திருக்கிறது.
எனவே அதிமுக- பாஜக கூட்டணிக்கே தேமுதிக செல்ல அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.