தொடர்புடைய செய்திகள்
- சென்னை அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ! – தீயணைக்கும் பணி தீவிரம்!
- இல்லத்தரசிகளுக்கு இப்பவே மாத உரிமை தொகை தரணும்! – கமல்ஹாசன் கோரிக்கை!
- நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
- தனித்தேர்வர்களுக்கு தனியா தேர்வா? ஆல்பாஸ் போடுங்க! – வானதி சீனிவாசன் கோரிக்கை!
- நடிகர் விஜய் வரி வழக்கு மேல்முறையீடு; பட்டியலில் சேர்க்க உத்தரவு!
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஐ.டி ரெய்டு! – ஓ.பி.எஸ் காட்டம்!
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்து ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த புகாரை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ரெய்டு மூலம் அச்சுறுத்தினால் அதையும் எதிர்கொள்ள அதிமுக அரசு தயாராகவே உள்ளது. இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
