வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (13:07 IST)

சென்னை அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ! – தீயணைக்கும் பணி தீவிரம்!

சென்னை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீர் தீ ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்துள்ளன. அதில் மின்சாதன கடைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து மேலும் சில கடைகளுக்கு தீ பற்றியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடத்திற்குள் சிலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.