1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. modi talk against dmk in nda general meeting

திமுகவுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சி!.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!.. தெறிக்கவிட்ட மோடி!...

modi stalin
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசியல்களம் சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது.. இந்த முறை அதிமுக மெகா கூட்டணி அமைத்து இருக்கிறது.. அந்த கட்சியில் பாமக, அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்திருக்கின்றன.
இந்நிலையில் சென்னைக்கு அடுத்துள்ள மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் தற்போது நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டு பேசினார்.

திமுக அரசின் முடிவுரைக்காண கவுண்டன் தொடங்கிவிட்டது.. மக்கள் நம்பிக்கையை குலைத்து விட்டது திமுக.. தமிழகம் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகிவிட்டது.. மேடையில் உள்ள தலைவர்கள் தமிழக எதிர்காலத்தை தீர்மானிப்பர்..தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் விரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்த ஊழலற்ற ஆட்சி அமைக்க வேண்டும்.. தமிழ்நாட்டு மக்களே!.. நீங்கள் திமுகவுக்கு வாக்களித்தீர்கள்.. ஆனால் அவர்கள் மக்களின் நம்பிக்கையை குலைத்து விட்டார்கள்.. திமுக ஆட்சியை CMC ஆட்சி என அழைக்கலாம். அது Corruption, Mafia, Crime.

திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழகம் துடிக்கிறது.. கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை.. தமிழ்நாட்டில் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும்..  இங்கே ஒரு குடும்பத்துக்கான ஆட்சி நடக்கிறது.. நீங்கள் திமுக ஆட்சியில் முன்னேற வேண்டும் என்றால் அவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போட வேண்டும்... தமிழக அரசு பெண்களை வசப்படுகிறது.. கலாச்சாரத்தை வசைப்படுகிறது

11 ஆண்டுகளில் முன் மடங்கு அதிக நிதி கொடுத்தோம்.. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு 11 ஆண்டுகளில் வரலாறு காணாத பணிகளை செய்திருக்கிறோம்.. தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக அரசு துரோகம் இழைத்து விட்டது.. ஊழல் மலிந்துள்ளது குழந்தைகளுக்கே தெரியும்..

ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஏழு மடங்கு அதிக நிதி கொடுத்தோம்.. காங்கிரஸ் ஆட்சி கொடுத்ததை விட இது அதிகம்.. விவசாயிகளுக்கு 12.700 கோடி நிதி கொடுத்திருக்கிறோம்.. தே.ஜா கூட்டணி அரசு அதிகார பரவல் மூலம் 3 லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம்.. காங்கிரஸ்- திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது ஒதுக்கியதை விட இந்த நிதி ஒதுக்கீடு 3 மடங்கு அதிகம்.. தமிழகத்தின் மிகப்பெரிய பலம் விவசாயிகளும் மீனவர்களும்தான்.. என் டி ஏ இவர்களுக்கு ஆதரவாக உள்ளது..' என மோடி பேசினார்.
அடுத்த கட்டுரையில்
கள்ளக்காதலனுடன் சேர்த்து கணவரை கொலை செய்த மனைவி.. இரவு முழுவதும் ஆபாச படம் பார்த்த அதிர்ச்சி செயல்..!