1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. latha rajinikanth said we missed rajinikanth

ஒரு பெரிய தலைவரை மிஸ் பண்ணிட்டோம்!.. பெரிய கனவு இருந்தது!.. லதா ரஜினிகாந்த் பேட்டி..

latha rajinikanth
1996ம் வருடம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சனம் செய்த ரஜினி அரசியலுக்கு வருவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். அப்போது மட்டும் அவர் அரசியலுக்கு வந்திருந்தால் முதலமைச்சராக மாறியிருப்பார். ஆனால் அவரும் அதை விரும்பாமல் திமுகவை ஆதரித்து அந்த கட்சியை வெற்றி பெற வைத்தார்..

அதன்பின் பல வருடங்கள் அரசியலுக்கு வருவது பற்றி ரஜினி ஆலோசனை செய்து வந்தார். தன்னுடைய திரைப்படங்களில் அரசியல் காட்சிகள் மற்றும் வசனங்களை வைத்தார். நான் அரசியலுக்கு வருவதை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து சொல்லி வந்தார்.

2021 தேர்தலுக்கு முன் நான் அரசியலுக்கு வருகிறேன் என அறிவித்தார். ஆனால், கொரோனா காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அரசியலுக்கு வரும் முடிவிலிருந்து பின் வாங்கினார். ஆனால், விஜயோ அரசியல் கட்சி துவங்கி முதலமைச்சராக மாறியிருக்கிறார்.

தற்போது அவரின் மனைவி லதா மக்கள் மேடை என்கிற இயக்கத்தை தொடங்கியிருக்கிறார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய லதா ரஜினிகாந்த் ‘ ரஜினிகாந்த் பெரிய தலைவர். 2021ம் வருடம் அரசியலுக்கு வந்திருக்க வேண்டும். அவர் வரவில்லை . அது பெரிய மிஸ்.. நான் ஃபீல் செய்தேன். அவர் வரவில்லை என்பதற்காக அல்ல.. அவர் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில், அவருக்கு பல திட்டங்கள் இருந்தன.. நிறைய கனவுகள் இருந்தது....

கொரோனா காலத்தில் அப்படி முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.. எப்படி ஒரு நாடு இருக்க வேண்டும் அவர் திட்டமிட்டிருந்தார்.. ஒரு பெரிய தலைவரை நாம் யூஸ் பண்ணி விட்டோம்’ என்று கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
ஒரே ஒரு தோல்வியை தாங்க முடியாத மம்தா பானர்ஜி.. உடைகிறது திரிணாமுல் காங்கிரஸ்