தொடர்புடைய செய்திகள்
- புயலால் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
- சென்னை அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா நினைவிடங்கள் மூடல்!
- புயல் கடந்தாலும் மழை தொடரும்… இந்த மாவட்ட மக்களே உஷார்!
- ருத்ரதாண்டவம் ஆடிய மாண்டஸ்: சென்னை சீறாவது எப்போது?
- கரையைக் கடந்த மாண்டஸ் புயல்… சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிவு!
காசிமேடு மீனவர்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம்: ஜெயகுமார் கோரிக்கை
மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட காசிமேடு மீனவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று கரையை கடந்த மாண்டஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் கரையோர பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் சேதம் அடைந்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சேதமடைந்த விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் என்று அறிவித்திருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புயல் காரணமாக சேதமடைந்த காசிமேடு மீனவர்கள் படகு உரிமையாளர்கள் 20 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Edited by Mahendran
